June 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-12


               ஜபம்-பதிவு-504
           (அறிய வேண்டியவை-12)

துரோணர் :
“அக்னி ஏற்பட்டால்
வருணமந்திரத்தைச்
சொல்லும் போது
நீர் வரும் அதைப்
பயன்படுத்தி தீயை
அணைக்க வேண்டும்
என்று நான்
எப்படி சொல்லிக்
கொடுத்தேனோ
அதை மட்டுமே
யோசித்துக் கொண்டு
தீயை அணைக்க மட்டுமே
வருணமந்திரம்
பயன்படும் - மற்ற
எதற்காகவாவது
பயன்படுமா என்பதை
சிந்திக்காமல் விட்டு
விட்டீர்கள்”

“வருணமந்திரத்தைப்
பயன்படுத்தினால்
நீர் வரும் என்றால்,
நமக்கு நீர்
தேவைப்படும் சமயத்தில்
வருணமந்திரத்தைப்
பயன்படுத்தினால்
வரும் நீரை
பயன்படுத்திக் கொள்ளலாம்
என்பதை அர்ஜுனன்
உணர்ந்து கொண்டான் ;”

“அர்ஜுனனைத் தவிர
வேறு யாரும் - இந்த
நிலையில் நின்று
யோசிக்கவேயில்லை ;

“அர்ஜுனனைத் தவிர
வேறு யாரும்
நீரை வரவழைக்கும்
வருணமந்திரத்தை
மாறுபட்ட
கோணத்தில் யோசித்து
பயன்படுத்தவில்லை ;”

“அர்ஜுனனைத் தவிர
வேறு யாரும்
நீரை வரவழைக்கும்
வருணமந்திரத்தை
எப்படி எல்லாம்
பயன்படுத்தலாம்
என்பதை யோசித்து
பயன்படுத்தவில்லை ;”
எத்தகைய சூழ்நிலையில்
பயன்படுத்த வேண்டும்
என்பதையும்
யோசிக்கவில்லை ; “

“மந்திரங்கள் என்பவை
மனப்பாடமாக
மனதில் இருக்க
வேண்டும்;
அப்போது தான் எந்த
ஒரு சூழ்நிலையிலும்
மந்திரத்தை
பயன்படுத்த முடியும் ;
அர்ஜுனனைத் தவிர
நீங்கள் யாரும்
மந்திரங்களை
மனப்பாடமும்
செய்யவில்லை;
மந்திரங்களை
மனதில்
நிறுத்தவுமில்லை;
எந்த சூழ்நிலையில்
மந்திரத்தை பயன்படுத்த
வேண்டும் என்று
தெரியவுமில்லை ;
மந்திரங்களை
பயன்படுத்துவதற்கு
தகுந்த சூழ்நிலை
வாய்த்தும்
பயன்படுத்தவுமில்லை;”

“குருவானவர் அளிக்கும்
நிலையில் இருக்கிறார்
சீடர்கள் ஏற்றுக்
கொள்ளும் நிலையில்
இருக்கிறார்கள்;
குருவானவர் அளிப்பதில்
எந்தவிதமான
மாறுபாட்டையும்
காட்டுவதில்லை;
ஆனால் ஏற்றுக்
கொள்ளும் நிலையில்
தான் சீடர்கள்
மாறுபடுகிறீர்கள் ;”

“கல்வியை உங்கள்
அனைவருக்கும் நான்
சமமாகத் தான்
பயிற்றுவித்தேன் - ஆனால்
அர்ஜுனனைத் தவிர
கற்றுக் கொடுத்த
கல்வியை நீங்கள்
எங்கே ? எப்படி ?
எப்போது ?
எந்த வகையில் ?
பயன்படுத்த
வேண்டும் என்று
யோசிக்கவேயில்லை ;
பயிற்சியும்
செய்யவில்லை ;
முயற்சியும்
செய்யவில்லை ;“

“ஆனால் அர்ஜுனன்
மட்டுமே நான் கற்றுக்
கொடுத்த கல்வியை
முயற்சி செய்து
பயிற்சி செய்தான் ;
நான் கற்றுக்
கொடுத்த கல்வியை
எங்கே ?எப்படி ?
எப்போது ?
எந்த வகையில் ?
பயன்படுத்த
வேண்டும் என்று
யோசித்தான் ;
பயன்படுத்தினான்;”

“அது மட்டுமில்லை
அர்ஜுனன் - நான்
கற்றுக் கொடுத்த
கல்வியை அப்படியே
பயன்படுத்தாமல்
அதை எப்படி
பயன்படுத்தலாம்
என்பதையும்
யோசித்தான் ;
ஆனால் நீங்கள் யாரும்
அப்படி யோசிக்கவில்லை “

“இப்பொழுது
புரிந்து கொண்டீர்களா
அர்ஜுனன் ஏன் உங்களை
விட சிறந்தவனாக
இருக்கிறான் என்பதை”

(அனைவரும் தலை
குனிந்து நின்றனர்)

“இந்த கதையில்
அறிந்து கொள்ள
வேண்டிய உண்மை
என்னவென்றால்
ஒருவர் நம்மை
விடதிறமைசாலியாக
இருந்தால்
நாமும் நம்முடைய
திறமையை வளர்த்து
அவரைப் போல
திறமை சாலியாக
முயற்சி செய்ய
வேண்டுமே ஒழிய
அவரைப் பார்த்து
பொறாமைப்படக்
கூடாது என்பதையும்;

குருவானவர்
சீடர்கள் அனைவருக்கும்
கல்வியை ஒரே மாதிரி
தான் போதிக்கிறார் ;
அதை ஏற்றுக் கொள்ளும்
வகையில் தான் சீடர்கள்
மாறுபடுகிறார்கள்
என்பதும் புலப்படுகிறது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 02-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment