July 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-107


                ஜபம்-பதிவு-599
          (அறிய வேண்டியவை-107)

“கதாயுதச் சண்டை
ஆவேசமாக
நடை பெற்றுக்
கொண்டு இருந்தது
சண்டைக் களத்தில்
துரியோதனனின்
ஆதிக்கமே
அதிகமாக இருந்தது
துரியோதனன்
அடித்த ஒவ்வொரு
அடியும் பீமனின் மேல்
இடியென இறங்கியது
அதனைத் தாங்க
முடியாமல் பீமன்
அங்கும் இங்கும்
ஓடினான் - கீழே
விழுந்து
எழுந்து ஓடினான்”

“துரியோதனனுடன்
நேருக்கு நேராக நின்று
கதாயுத சண்டை
போட முடியாமல்
பீமன் தடுமாறிக்
கொண்டிருந்தான்)

அர்ஜுனன் :
“அண்ணன் பயந்து
இது வரை நான்
பார்த்ததே இல்லை
துரியோதனனுடன்
கதாயுத சண்டை
போடும் போது தான்
நான் சின்ன
அண்ணனுடைய
முகத்தில்
பயத்தையே
பார்க்கிறேன்
துரியோதனனின்
அடிகளைத் தாங்க
முடியாமல்
ஓடுவதைப்
பார்க்கிறேன்”

“சின்ன அண்ணாவால்
துரியோதனனை
சமாளிக்க முடியுமா ?
என்று
தோன்றவில்லை
சின்ன அண்ணாவால்
துரியோதனனை
கொல்ல
முடியுமா என்று
தோன்றவில்லை “

“நடக்கும்
சண்டையைப்
பார்க்கும் போது
சின்ன அண்ணன்
துரியோதனனை
வெற்றி கொள்வார்
என்ற நம்பிக்கை
எனக்கு இல்லை”

கிருஷ்ணன் :
“இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
கதாயுத சண்டையில்
துரியோதனனைக்
கொன்று வெற்றி
பெற முடியாது
என்ற நிலை
இருக்கும் போது
பீமனால்
எப்படி வெற்றி
முடியும் என்று
நான் ஏற்கனவே
சொல்லி இருக்கிறேன் “

அர்ஜுனன் :
“அப்படி என்றால்
சின்ன அண்ணன்
பீமனுடைய நிலை”

கிருஷ்ணன் :
“பீமன் உயிர் பிழைக்க
வேண்டும் என்றால்
அவனுக்கு
அவனுடைய
சாபம் நினைவுக்கு
வர வேண்டும்
துரியோதனனுடைய
தொடையை
உடைத்து
கொள்வேன் என்று
சபதம் ஏற்று
இருக்கிறான்
அல்லவா
அந்த சபதம்
பீமனுடைய
நினைவுக்கு
வர வேண்டும்”

அர்ஜுனன்  :
“கதாயுத சண்டையில்
இடுப்பிற்குக் கீழே
அடிக்கக் கூடாது
என்ற விதி
இருக்கிறது”

கிருஷ்ணன் :
“சண்டை
செய்வதற்கென்று
வகுக்கப்பட்ட
விதிகளை
நினைத்துக்
கொண்டிருந்தால்
பீமனுடைய விதி
முடிந்து விடும்”

“பீமனுடைய விதி
முடியாமல் இருக்க
வேண்டுமானால்
சண்டை
செய்வதற்கென்று
வகுக்கப்பட்ட சில
விதிகளை மீறித்
தான் ஆக வேண்டும்”

“தர்மம் உயிர்
பிழைக்க வேண்டும்
என்றால் அதர்மம்
அழிக்கப்பட்டாகத்
தான் வேண்டும்
அதர்மத்தை
அதர்மத்தால் தான்
அழிக்க வேண்டும்”

“துரியோதனனை
தர்மத்தால் கொல்ல
முடியாது
அதர்மத்தால் தான்
கொல்ல முடியும்
சில தர்மக்
காரியங்கள் நடைபெற
வேண்டுமானால்
அதர்மக்
காரியங்களைப்
பண்ணித் தான்
ஆக வேண்டும்”

“துரியோதனனுடைய
தொடையை
உடைத்து
துரியோதனனைக்
கொல்வேன் என்று
சின்ன அண்ணா
பீமன் எடுத்துள்ள
சபதத்தை சின்ன
அண்ணாவுக்கு
நினைவூட்ட
வேண்டும்”

அர்ஜுனன் :
“அவருக்கு எப்படி
நினைவூட்டுவது”

கிருஷ்ணன்  :
“நான்
நினைவூட்டுகிறேன்”

(துரியோதனனுக்கும்
பீமனுக்கும்
இடையே
மிகவும்
உக்கிரமாக
சண்டை
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது)


----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 19-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment