July 19, 2020

600 – வது பதிவு :


600 – வது பதிவு :

அன்பிற்கினியவர்களே,

ஜபம் தன்னுடைய
600 வது பதிவைத்
தொட்டிருக்கிறது

ஒரு நாளைக்கு
ஒரு பதிவு
இரண்டு பதிவு
என்று ஜபம்
கட்டுரையை
பதிவு செய்த
வந்த நான்
கொரோனா காலத்தில்
மொத்தமாக
ஐந்து பதிவுகள்
பத்து பதிவுகள்
பதினைந்து பதிவுகள்
என்று போட
ஆரம்பித்தேன்

அனைவருடைய
வரவேற்பும்
பாராட்டுதல்களும்
வழி காட்டுதல்களும்
அறிவுரைகளும்
என்னை
வழிநடத்திய
காரணத்தினாலும்
எனக்கு துன்பம்
ஏற்பட்ட போது
எனக்கு கவசமாக
இருந்து துன்பத்தைத்
தடுத்து வாழ்க்கையை
வாழச் செய்த
அன்புள்ளங்கள்
எனக்கு துணையாக
இருந்த
காரணத்தினாலும் தான்
என்னால்
600 வது பதிவை
பதிவு செய்ய முடிந்தது

ஜபத்தில் நான்
பல்வேறு கட்டுரைகளை
எழுதிக் கொண்டு
வருகிறேன்
நான் பெரும்பாலும்
யாரும் தொடாத
கதைகளையே எடுத்து
அதற்கு வசனம்
எழுதுவேன்
இப்போது மகாபாரதக்
கதையில் ஒரு சில
கதைகளை மட்டும்
எடுத்துக் கொண்டு
அதற்கு வசனம்
எழுதிக் கொண்டு
வருகிறேன்

கதைகளுக்கு
நான் எழுதும்
வசனங்கள்
அனைவருக்கும்
பிடித்திருக்கின்ற
காரணத்தினால்
மகாபாரதக் கதைகளில்
சில முக்கியமான
கதைகளுக்கு வசனம்
எழுதிக்
கொண்டிருக்கிறேன்

இறைவனின்
அருளும்
சித்தர்களின்
வழிகாட்டுதலும்
தாயின்
ஆசியும்
வாழ்க்கைத்
துணைவியின்
துணையும்
உடன்
பிறந்தவர்களின்
நேசமும்
நண்பர்களின்
அரவணைப்பும்
உறவுகளின்
பாசமும்
பெற்று நான்
ஜபத்தை
தொடர்கிறேன்

நன்றி !

---------என்றும் அன்புடன்
---------K.பாலகங்காதரன்

-------19-07-2020
/////////////////////////////////////////////

No comments:

Post a Comment