August 13, 2020

திருக்குறள்-தேரான் -பதிவு-1

                                                        திருக்குறள்-தேரான்

-பதிவு-1

 

“தேரான் பிறனைத்

தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பைத் தரும்”

 

--------திருவள்ளுவர்

--------திருக்குறள்

 

“ஒருவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறாரா

இல்லையா

என்பதை

இரண்டு

விஷயங்கள்

மூலமாகத்

தெரிந்து

கொள்ளலாம்”

 

ஒன்று : 

“ஒருவர்

நம்மைப் பார்த்து

செயல்படும் விதம்”

 

இரண்டு :

“ஒருவர் நாம்

சொல்வதைக் கேட்டு

செயல்படும் விதம் “

 

ஒன்று:

“ஒருவர் நம்மை

தெருவில்

பார்க்கும் போதோ?”

 

அல்லது

 

“அவருடைய வீட்டில்

நம்மைப்

பார்க்கும் போதோ?”


அல்லது

 

“நம்முடைய வீட்டில்

நம்மைப்

பார்க்கும் போதோ?”

 

அல்லது

 

“எந்த இடம் என்று

கூட பார்க்காமல்

எந்த இடத்தில்

இருந்தாலும்

அவர் நம்மைப்

பார்க்கும் போதோ ?

நாம் அவரைப்

பார்க்கும் போதோ?

அவர்

நம்மைப் பார்த்து

கையெடுத்து

கும்பிடுதல்

உட்கார்ந்த

நிலையில் இருந்து

எழுந்து

மரியாதை

செலுத்துதல்

போன்ற

மரியாதை தரும்

விஷயங்களை

செய்தார் என்றால்

அவர் நம்மீது

மரியாதை

வைத்திருக்கிறார்

என்று அர்த்தம் “

 

“ஒருவர்

நம்மீது

வைத்திருக்கும்

மரியாதையை

வெளிப்படுத்துகிறார்

என்று அர்த்தம்”

 

“ஒருவர் நம்மீது

வைத்திருக்கும்

மரியாதையை

அவர்

தானாகவே

நம்முடைய

தூண்டுதல்

இல்லாமல்

சுயமாகவே

வெளிப்படுத்துகிறார்

என்று அர்த்தம்”

 

“இது நம்மைப்

பார்க்கும் போது

ஒருவர்

நம்மீது உள்ள

மரியாதையை

வெளிப்படுத்தும்

விதம்”

 

இரண்டு :

“ஒருவரால்

நமக்கு

ஒரு வேலை

முடிய வேண்டி

இருக்கிறது”

 

“அதனால்

அவருடைய

சம்மதத்தைப்

பெற வேண்டும்

என்பதற்காக

அவரிடம்

பேசுகிறோம்”

 

“அவரும்

கண்டிப்பாக

வந்து அந்த

வேலையை

முடித்துத்

தருவதாக

ஒத்துக்

கொள்கிறார்”

 

“நம்முடன்

இணைந்து

அந்த வேலையை

செய்வதற்கு

அவரும்

ஒத்துக்

கொள்கிறார்”

 

“எந்த வேலை

என்றாலும்

பரவாயில்லை

முடித்து விடலாம்

என்று

அவரும்

ஒத்துக்

கொள்கிறார்”

 

-----------என்றும் அன்புடன்

-----------K.பாலகங்காதரன்

 

-----------13-08-2020

/////////////////////////////////////////

No comments:

Post a Comment