May 03, 2022

ஜபம்-பதிவு-748 (சாவேயில்லாத சிகண்டி-82)

 

ஜபம்-பதிவு-748

(சாவேயில்லாத

சிகண்டி-82)

 

பீஷ்மனுக்கு

புத்தி பேதலித்து

விட்டது

அதனால்

குரு சொல்வதையே

தவறு என்கிறான்

 

பீஷ்மனுக்கு

சிந்திக்கும் திறன்

போய் விட்டது

அதனால்

குருவையே எதிர்த்து

போரிடத்

தயாராகி விட்டான்

 

பீஷ்மன்

அறிவற்ற ஒரு

செயலைச்

செய்திருக்கிறான்

அதுவும்

அறிவில்லாமல்

செய்திருக்கிறான்

 

பிள்ளைகள் தவறு

செய்யும் போதே

பெற்றோர்கள்

கண்டித்து

வளர்க்க வேண்டும்

பிள்ளைகள்

தவறு செய்யும் போது

அவர்கள் தவறு

செய்கிறார்கள் என்பதை

அவர்களுக்கு

உணர்த்த வேண்டும்

பிள்ளைகள்

தாங்கள் செய்தது

தவறு என்பதை

அவர்கள் உணர்ந்து

கொள்ளும்படிச்

செய்ய வேண்டும்

 

செய்த தவறுக்கு

மன்னிப்பு கேட்கச்

சொல்ல வேண்டும்

தவறை

திருத்திக் கொள்ளச்

சொல்ல வேண்டும்

 

பிள்ளைகள் தங்கள்

தவறை திருத்திக்

கொள்ளாமல்

அதே தவறை

மீண்டும் மீண்டும்

செய்தால்

பிள்ளைகளை

தண்டிக்க வேண்டும்

 

பிள்ளைகளை

தண்டிப்பது என்பது

பிள்ளைகள் தாங்கள்

செய்தது தவறு

என்பதை

உணர்ந்து கொண்டு

தவறை மீண்டும்

செய்யாமல்

தங்களைத்

திருத்திக்

கொள்வதற்குத் தான்

 

பிள்ளைகள்

தவறு செய்யும் போது

பெற்றோர்கள்

அதை கண்டு

கொள்ளாமல் இருப்பதும்

தவறை

ஊக்குவிப்பது போல்

நடந்து கொள்வதும்

பிள்ளைகள்

கெட்டுப்போவதற்கு

அது ஒரு

வாய்ப்பாக அமையும்

 

தாங்கள் செய்தது

தவறு என்பதை

உணராத பிள்ளைகள்

பெற்றோர்களை

மதிக்காது

கல்வி

கற்றுக் கொடுத்த

குருவை மதிக்காது

 

உன் மகன்

செய்த தவறை

அவனுக்கு உணர்த்த

நீ தவறி விட்டாய்

 

பீஷ்மன்

தான் செய்தது

தவறு என்று உணர்ந்து

இருப்பானேயானால்

தன் தவறை

திருத்திக் கொண்டு

இருந்திருப்பான்

என்னை

மதித்திருப்பான்

என் வார்த்தைக்கு

மதிப்பு

கொடுத்திருப்பான்

 

பீஷ்மன்

தான் செய்த

தவறை உணரவில்லை

தான் செய்தது

தவறு என்று

அவனுக்குத்

தெரியவில்லை

அதனால்

அவன் என்னை

மதிக்காமல்

நடந்து கொள்கிறான்

என்னுடைய

வார்த்தைக்கு

மதிப்பு கொடுக்காமல்

அவமதிக்கிறான்

குருவை எதிர்த்து

போரிடவே

வந்து விட்டான்

 

கங்காதேவியே

நீயும் ஒரு

சாதாரண பெண்

போலத் தான்

நடந்து கொள்கிறாய்

 

உன் மகன்

பீஷ்மன்

செய்த தவறை

நியாயப்படுத்தி பேசிக்

கொண்டிருக்கிறாய்

 

செல்

உன் மகனிடம்

செல்

 

உன் மகன்

செய்தது தவறு

என்று சொல்

செய்த தவறுக்கு

பிராயச் சித்தம்

செய்யச் சொல்

அம்பையை

திருமணம்

செய்யச் சொல்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment