May 03, 2022

ஜபம்-பதிவு-749 (சாவேயில்லாத சிகண்டி-83)

 ஜபம்-பதிவு-749

(சாவேயில்லாத

சிகண்டி-83)

 

அம்பையை

திருமணம் செய்ய

ஒத்துக் கொண்டால்

போரை நிறுத்துகிறேன்

என்று சொல்

 

போரில் பீஷ்மன்

கொல்லப்பட

வேண்டாம் என்றால்

அவனை அம்பையை

திருமணம் செய்து

கொள்ளச் சொல்

 

கங்காதேவி :

விரும்பும் போது

தான் மரணம் என்ற

வரத்தைப் பெற்றவன்

பீஷ்மன்

அவனை எப்படி

உங்களால்

கொல்ல முடியும்

 

பரசுராமர் :

தீர்வு இல்லாத

பிரச்சினை என்ற

ஒன்று கிடையவே

கிடையாது

பிரச்சினைக்குரிய

தீர்வு தெரியவில்லை

என்று தான்

சொல்ல வேண்டும்

 

பீஷ்மனைக்

கொல்லும் வழி

இந்த உலகத்திற்கு

வேண்டுமானால்

தெரியாமல்

இருக்கலாம் ஆனால்

பீஷ்மனைக் கொல்லும்

வழி எனக்குத்

தெரியும்

 

அவனை எப்படி

கொல்வது என்பது

எனக்குத் தெரியும்

பீஷ்மனை நான்

கொல்லும் போது

அதை நீயே

தெரிந்து கொள்வாய்

 

கங்காதேவி செல்

உன் மகனிடம் செல்

அவனை

அம்பையை

திருமணம் செய்து

கொள்ளச் சொல்

மரணத்திலிருந்து

அவன் உயிரைக்

காப்பாற்றிக்

கொள்ளச் சொல்

 

ஒரு தாய்

எப்படி நடந்து

கொள்ள வேண்டுமோ

அப்படி

நடந்து கொள்

 

உன் மகனை

அறிவுரை கூறி

திருத்த முயற்சி செய்

 

இங்கே என்னிடம்

நின்று கொண்டு

காலத்தை வீணாக்காமல்

உன் மகன்

பீஷ்மனிடம் செல்

அவனிடம் பேசு

 

நான் உரைத்த

உண்மையை பேசு

நீ உணர்ந்த

உண்மையை பேசு

உனக்கு

உணர்த்தப்பட்ட

உண்மையைப் பேசு

 

(என்று பரசுராமர்

கங்காதேவியிடம்

சொல்லி

அனுப்பி விட்டார்.

கங்காதேவி

பீஷ்மரிடம்

செல்கிறாள்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment