May 03, 2022

ஜபம்-பதிவு-752 (சாவேயில்லாத சிகண்டி-86)

 ஜபம்-பதிவு-752

(சாவேயில்லாத

சிகண்டி-86)

 

கங்காதேவி :

ஆனால்,

பரசுராமர்

அனைத்தும் அறிந்தவர்

 

பீஷ்மர் :

பரசுராமர்

அனைத்தையும்

அறிந்தவர் கிடையாது

அனைத்தையும் 

அறிந்தவராக

இருந்திருந்தால்

என்னை

அறிந்திருப்பார்

என்னுடைய

கொள்கையை

அறிந்திருப்பார்

நியாயம் எது

அநியாயம் எது

என்று

தெரிந்திருப்பார்

 

ஒன்றும் அறியாத

காரணத்தினால்

தான் சீடனுடன்

போரிட

போர்க்களத்திற்கு

வந்திருக்கிறார்

 

பரசுராமர்

அறியாததை

நான் அவருக்கு

அறிய

வைக்கிறேன்

நியாயம் எது

என்பதை

அவரை

உணர

வைக்கிறேன்

 

தாயே

இனி போரை

யாராலும்

நிறுத்த

முடியாது

போரை நிறுத்த

எந்த ஒரு

வழியும்

கிடையாது

 

தாயே

என்னை

ஆசிர்வதித்து விட்டு

செல்லுங்கள்

 

கங்காதேவி :

எதையும் சொல்லி

வாழ்த்தும்

நிலையில்

நான் இல்லை

மகனே

கடவுள் உனக்கு

துணை நிற்கட்டும்

 

(என்று

சொல்லி விட்டு

கங்காதேவி

அந்த இடத்தை

விட்டு சென்று

விடுகிறாள்)

 

பீஷ்மருக்கும்

பரசுராமருக்கும்

போர்

ஆரம்பிக்கப்

போகிறது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------01-05-2022

-------செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////

No comments:

Post a Comment