October 17, 2022

ஜபம்-பதிவு-872 மரணமற்ற அஸ்வத்தாமன்-4 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-872

மரணமற்ற

அஸ்வத்தாமன்-4

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

நாளையே

நீ அரசனாகி

விட்டால்

உன்னுடைய

தகுதிக்கு

ஏற்றாற்போல்

தான் நட்பை

வைத்துக்

கொள்வாயே

ஒழிய

என்னைப்

போன்ற ஏழை

பிராமணனையா

நட்பாக

வைத்துக்

கொள்வாய்

 

என்னை

நண்பன்

என்று

ஏற்றுக்

கொள்ளவே

உன் மனம்

மறுக்கும்

 

என்னை

நண்பன்

என்று

சொல்லவதையே

நீ இழிவாக

நினைப்பாய்

 

துருபதன் :

நீ என்னுடைய

நண்பன்

உன்னை

நான் எப்படி

அவ்வாறு

நினைப்பேன்

 

துரோணர் :

அதை

இப்போதே

எப்படி

சொல்ல

முடியும்

காலமாற்றத்தால்

உன்னுடைய

மனம்

மாறலாம்

அல்லவா

 

துருபதன் :

என்னுடைய

மனம் மாறும்

அளவிற்கா

நான் உன்னுடன்

நட்பு

கொண்டிருக்கிறேன்

 

நான்

உன் மேல்

கொண்டிருக்கும்

நட்பை

சாதாரணமானது

என்று நினைத்து

விட்டாயா

 

நான்

உன் மேல்

வைத்திருக்கும்

நட்பு

எவ்வளவு

புனிதமானது

என்று உனக்குத்

தெரியுமா

 

நான்

நம்முடைய

குருவிடம்

கற்றுக்

கொண்டதை விட

நீ என்னுடைய

சந்தேகங்களை

தீர்த்து

வைத்ததின்

மூலமாக

உன்னிடமிருந்து

நான்

கற்றுக்

கொண்டது

தான் அதிகம்

 

அதனால்

நீயும்

எனக்கு

ஒரு

குரு தான்

 

துரோணர் :

சந்தேகத்தை

தீர்த்து

வைப்பவர்கள்

அனைவரும்

குருவாகி

விட

முடியாது

 

கற்றுக்

கொடுப்பவர்

மட்டுமே

குருவாக

இருக்க

முடியும்

 

குருவானவர்

கற்று கொடுப்பவர்

மட்டுமே

கிடையாது

சீடனின்

வாழ்க்கை

உயர்வதற்கு

காரணமாக

இருப்பவரும் கூட

 

சீடனின்

வாழ்க்கைக்கு

எது தேவை

எது தேவையில்லை

என்பதை உணர்ந்து

சீடனுடைய

வாழ்க்கைக்கு

தேவையானதை

உருவாக்கிக்

கொடுப்பவர்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

No comments:

Post a Comment