October 17, 2022

ஜபம்-பதிவு-877 மரணமற்ற அஸ்வத்தாமன்-9 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-877

மரணமற்ற

அஸ்வத்தாமன்-9

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துருபதன் :

குருதேவர்

சொன்னதை

எல்லாம் மனதில்

வைத்துக்

கொள்ளாதே

 

சத்தியமாக சொல்கிறேன்

நான் அரசனான

பிறகு என்னுடைய

ராஜ்ஜியத்தில்

பாதியை நான்

உனக்குத் தருவேன்

 

(துருபதனை

ஏற்றிக் கொண்டு

தேரானது

பாஞ்சால நாட்டை

நோக்கிச் சென்று

கொண்டிருந்தது)

 

துரோணர் :

குருதேவா

நானும் செல்ல

வேண்டிய நேரம்

வந்து விட்டது

 

அக்னிவேஸ்யர் :

நீ என்ன செய்யப்

போகிறாய்

துரோணா

 

துரோணர் :

பிராமணருக்கென்று

ஒதுக்கப்பட்ட பணியை

செய்யப்போகிறேன்

 

அக்னிவேஸ்யர் :

துரோணா

மனித வாழ்க்கையின்

நான்கு பிரிவுகளான

பிரம்மச்சரியம்,

கிரகஸ்தம்,

வனஸ்பிரஸ்தம்,

சன்னியாசம்

என்ற நான்கில்

நீ பீரம்மச்சரியத்தை

முடித்து

கிரகஸ்தனாகப்

போகிறாய்

 

பிரம்மச்சரியத்தை

முடிப்பதற்கு முன்னர்

தவமியற்றி

பிரம்மச்சரியத்தை முடி

 

துரோணர் :

அப்படியே செய்கிறேன்

குருதேவா

என்னை வாழ்த்தி

அனுப்புங்கள்

 

அக்னிவேஸ்யர் :

ஒரு தலைவனுக்கு

இருக்க வேண்டிய

ஐந்து தன்மைகளான

பொறுமை, நிதானம்,

தொலைநோக்கு பார்வை,

அனைத்தையும்

சமாளிக்கும் திறன்,

அனைவரையும்

கட்டுப்படுத்தும் திறமை

ஆகியவை

உன்னிடம் இருக்கிறது

 

வருங்காலத்தில்

நீ அரசனாகவோ

அல்லது

லட்சக்கணக்கானவர்களை

வழி நடத்திச் செல்லும்

தலைவனாகவோ ஆகலாம்

 

கிருபாச்சாரியார் வசிக்கும்

ஆசிரமத்திற்குச்

சென்று தவம் இயற்று

 

கிருபர் உன்னை

பார்த்துக் கொள்வார்

நீ வருவதை

கிருபாச்சாரியாருக்குத்

தெரிவிக்கிறேன்

 

என்னுடைய ஆசி

உனக்கு எப்போதுமே

உண்டு

 

(குருதேவர்

அக்னிவேஸ்யர்

துரோணரை

ஆசிர்வதிக்கிறார்

 

துரோணர்

கிருபாச்சாரியார்

வசிக்கும் ஆசிரமம்

இருக்கும் இடத்தை

நோக்கி சென்று

கொண்டிருக்கிறார்

 

மரணமற்றவனை

 

கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனை


மகனாகப்

பெறப்போகும் துரோணர்

கிருபாச்சாரியார்

வசிக்கும்

ஆசிரமத்தை

நோக்கிச் சென்று

கொண்டிருக்கிறார்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment