October 17, 2022

ஜபம்-பதிவு-873 மரணமற்ற அஸ்வத்தாமன்-5 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-873

மரணமற்ற

அஸ்வத்தாமன்-5

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

குருவானர்

சீடன் கேட்பது

அனைத்தையும்

செயல்படுத்துபவர்

கிடையாது

சீடனின்

கர்மவினையை

உணர்ந்து

சீடனுடைய

வாழ்க்கைக்த்

தேவையானதை

செயல்படுத்துபவர்

 

சீடனால் செய்ய

முடிந்தவற்றை

குருவானவர்

செய்து

கொடுப்பது

கிடையாது

சீடனால்

எந்த ஒன்றை

செய்ய

முடியவில்லையோ

அந்த ஒன்றை

செய்து

கொடுப்பவர்

 

குருவை

உணர்ந்து

கொள்வது

கடினம்

 

துருபதன் :

குருவை

உணர்ந்து

கொள்ள

வழி எதுவும்

கிடையாதா

 

துரோணர் :

இருக்கிறது

 

துருபதன் :

என்ன அது

 

துரோணர் :

கடவுளை

உணர்ந்து

கொண்டால்

குருவை

உணர்ந்து

கொள்ளலாம்

 

கடவுளும்

குருவும் ஒன்று

இருவரும்

வேறு வேறு

கிடையாது

 

இருவருமே

கேட்பவர்களுக்கு

கேட்டதை

எல்லாம்

கொடுப்பவர்கள்

கிடையாது

இருவருமே

கேட்பவர்

கேட்டதை

எல்லாம்

செய்பவர்கள்

கிடையாது

 

கேட்பவர்களுக்கு

எது தேவையோ

அதை

கொடுப்பவர்கள்

கேட்பவர்களுக்கு

எது தேவையோ

அதை

செய்பவர்கள்

 

தன்னால்

இந்த செலைச்

செய்ய முடியாது

மனித சக்தியால்

இந்தச் செயலைச்

செய்ய முடியாது

மனித சக்திக்கு

அப்பாற்பட்ட

சக்தியால் தான்

இந்த செயலைச்

செய்ய முடியும்

என்ற நிலை

வரும் போது

குருவும் கடவுளும்

ஓடோடி வந்து

சீடனுக்குத்

தேவையானதைச்

செய்வார்கள்

 

துருபதன் :

குரு மனிதர்

தானே

 

துரோணர் :

இல்லை

கடவுள்

 

குருவுக்குள்

கடவுள்

இருக்கிறார்

கடவுளுக்குள்

குரு

இருக்கிறார்

இதனை புரிந்து

கொண்டவர்கள்

குருவுக்குள்

கடவுளையும்

கடவுளுக்குள்

குருவையும்

கண்டிருக்கிறார்கள்

 

இதனைப்

புரிந்து

கொள்ளாதவர்கள்

கடவுளையும்

குருவையும்

வெவ்வேறு

நிலைகளில்

நின்று

தேடிக்

கொண்டிருக்கிறார்கள்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment