October 17, 2022

ஜபம்-பதிவு-874 மரணமற்ற அஸ்வத்தாமன்-6 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-874

மரணமற்ற

அஸ்வத்தாமன்-6

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துருபதன் :

அப்படி

என்றால்

நாம்

விருப்பப்பட்டதை

இருவரும்

செய்ய

மாட்டார்களா

 

துரோணர் :

விருப்பட்டதை

செய்ய

மாட்டார்கள்

விதிப்படி தான்

செய்வார்கள்

 

துருபதன் :

விதிப்படி தான்

செய்வார்கள்

என்றால்

நாம் ஏன் இந்த

இருவரையும்

நாட வேண்டும்

இருவரும்

தேவையில்லையே

 

துரோணர் :

விதியையே

மாற்றும் சக்தி

இந்த

இருவருக்கும்

உண்டு

அதனால்

தான்

அவர்களை

நாட வேண்டும்

 

துருபதன் :

நம்பி

வந்தவர்களின்

விதியை

மாற்றி

நல்வாழ்வை

அவர்களுக்கு

ஏற்படுத்தித்

தரலாமே

 

துரோணர் :

எது தேவையோ

அதற்கு விதியை

மாற்றுவார்கள்

எதற்கு

தேவையில்லையோ

அதற்கு விதியை

மாற்ற வேண்டிய

அவசியம் இல்லை

என்று விட்டு

விடுவார்கள்

 

துருபதன் :

புரிந்து

கொள்வது

கடினமாக

இருக்கிறது

 

துரோணர் :

புரிந்து

கொள்ள

முயற்சி

செய்யாதே

 

உணர்ந்து

கொள்ள

முயற்சி

செய்

 

சிலவற்றை

புரிந்து

கொள்ள

முடியாது

உணர்ந்து

கொள்ளத்

தான்

முடியும்

 

துருபதன் :

உன்னுடைய

அறிவுக்கும்

திறமைக்கும்

நீ அரசனாக

வேண்டியவன்

 

அரசனுக்குரிய

அனைத்து

தகுதிகளும்

உன்னிடம்

இருக்கிறது

 

நாளை நான்

அரசனானால்

என்னுடைய

ராஜ்ஜியத்தில்

பாதியை நான்

உனக்குத் தருவேன்

 

துரோணர் :

பிராமணர்கள்

கடவுளுக்காகவே

அர்ப்பணிக்கப்பட்டவர்கள்

 

கடவுளுக்கு

சேவை

செய்யவே

பிறந்தவர்கள்

 

கடவுளுக்கும்

மனிதனுக்கும்

தொடர்பை

ஏற்படுத்துபவர்கள்

 

கடவுளுக்கும்

மனிதனுக்கும்

பாலமாக இருந்து

செயல்படுபவர்கள்

 

கடவுளுக்கு சேவை

செய்யும் புனிதமான

வேலையைச்

செய்யும்

பிராமணர்கள்

மக்களை ஆளும்

அரசன்

வேலையைச்

செய்யக்கூடாது

 

பிராமணர்கள்

அரசாளக்

கூடாது

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment