November 06, 2022

ஜபம்-பதிவு-882 மரணமற்ற அஸ்வத்தாமன்-14 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-882

மரணமற்ற

அஸ்வத்தாமன்-14

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

காதலின் ஆழத்திலும்

காமத்தின் உச்சத்திலும்

கடவுளைத்

தவற விடுவதற்கு

முக்கிய காரணம்

விழிப்பு நிலை

இல்லாதது மட்டுமல்ல

சரியான புரிதல்

இல்லாததும் ஆகும்

 

காதலையும்

காமத்தையும்

பற்றி

வெளிப்படையாக

பேசுபவர்களை

தவறானவர்களாகவும்

காதலையும்

காமத்தையும்

பற்றி

வெளிப்படையாக

பேசாதவர்களை

நல்லவர்களாகவும்

நினைப்பதே

காதலைப் பற்றியும்

காமத்தைப் பற்றியும்

மக்கள் சரியாகப்

புரிந்து

கொள்ளாததற்குக்

காரணம்

 

காதலும் காமமும்

மனித வாழ்க்கையுடன்

இரண்டறக் கலந்தது

மனிதர்கள் இந்த

இரண்டையும்

தங்கள்

வாழ்க்கையிலிருந்து

பிரித்து

வைக்கக் கூடாது

 

ஆனால்

சாமியார்கள்

காதலையும்

காமத்தையும்

தங்கள்

வாழ்க்கையில்

இருந்து பிரித்து

வைத்திருக்கின்றனர்

தீண்டத்தகாத

பொருள் போல

வைத்திருக்கின்றனர்

 

இந்த இரண்டையும்

தீண்டும் சாமியார்களை

இந்த உலகம்

குற்றவாளிகளைப்

போலப் பார்க்கின்றது

குற்றவாளிகளைப்

போல நடத்துகின்றது

 

சாமியார்கள்

என்றால்

இப்படித் தான்

இருக்க வேண்டும்

என்று

இந்த உலகம்

வரையறை செய்து

வைத்திருக்கிறது

 

சாமியார்கள்

காதலைப் பற்றியும்

காமத்தைப் பற்றியும்

நினைக்கக் கூடாது

பேசக் கூடாது

என்று

சொல்லி

வைத்திருக்கிறது

 

சாமியார்கள் அதை

மீறும் போது

இந்த உலகம்

சாமியார்களைத்

தவறாகப் பார்க்கிறது

தவறாகப் பேசுகிறது

 

அதனால்

சாமியார்களாக

இருப்பவர்கள்

காதலையும்

காமத்தையும்

அடக்கி

வைத்து விட்டு

தங்கள்

ஆசைகளுக்கு

அணை கட்டி

வைத்து விட்டு

தங்கள்

கற்பனைகளைப்

புதைத்து விட்டு

காதலைப் பற்றியும்

காமத்தைப் பற்றியும்

நினைக்காமல்

பேசாமல்

எழுதாமல்

வாழ்ந்து

வருகின்றனர்

 

சாமியார்கள்

எப்படி வாழ

வேண்டுமோ

அப்படி வாழாமல்

இந்த சமுதாயம்

தங்களைத் தவறாக

நினைத்து விடுமோ

என்று

பயந்து கொண்டு

வாழ்கின்றனர்

 

இந்த சமுதாயத்தில்

உள்ள மக்களைப்

பார்த்து

பயந்து

வாழ்கின்றனர்

 

சாமியார்கள்

தாங்கள் எப்படி

வாழ வேண்டும்

என்று

நினைக்கிறார்களோ

அப்படி அவர்களால்

வாழ முடிவதில்லை

அவர்களால்

சுதந்திரமாக வாழ

முடிவதில்லை

அவர்கள் விருப்பப்படி

வாழ முடிவதில்லை

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----24-10-2022

----திங்கட் கிழமை

 

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment