November 06, 2022

ஜபம்-பதிவு-896 மரணமற்ற அஸ்வத்தாமன்-28 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-896

மரணமற்ற

அஸ்வத்தாமன்-28

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

அன்புக்கும்

கருணைக்கும்

வேறுபாடு

இருக்கிறதா

 

சிவன் :

இருக்கிறது

 

ஒரு மரம்

தன் மரத்தில்

உள்ள

பழங்களை

பிடித்து

வைத்துக்

கொள்வதற்குப்

பெயர்

அன்பு

அதே மரம்

பிடித்து

வைத்துக்

கொண்டு

இருந்த

பழத்திற்குத்

தேவையானவற்றை

அளிப்பதற்குப்

பெயர்

கருணை

 

அதைப்போல

இந்த

உலகத்தில்

உள்ள

அனைத்தையும்

அன்பு என்ற

ஒன்றினால்

தன்னுள் அடக்கி

பிடித்து

வைத்துக் கொண்டு

இருக்கும்

இறைவன்

இந்த

உலகத்திற்குத்

தேவையானவற்றை

கருணையினால்

அளித்துக்

கொண்டு

இருக்கிறான்

 

இத்தகைய

அன்பையும்

கருணையையும்

கொண்டவன்

தான்

இறைவன்

 

அதைப்போல

மனிதனும்

அன்பும்

கருணையும்

கொண்டவனாக

இருக்க

வேண்டும்

 

அன்பையும்

கருணையையும்

கொண்டவனை

நம்பலாம்

அன்பை

மட்டும்

கொண்டவர்களை

நம்பக்

கூடாது

 

துரோணர் :

ஐயனே

தங்களிடமிருந்து

நான்

வரத்தை

மட்டுமல்ல

அறிவையும்

பெற்றிருக்கிறேன்

 

சிவன் :

வரம்

பெறத்

தகுதியுடையவர்களுக்கு

வரத்தை

அளித்தேன்

ஆனால்

துரோணரே

நீங்கள்

வரத்துடன்

அறிவையும் பெறத்

தகுதியுடையவர்

அதனால்

உங்களுக்கு

வரத்துடன்

அறிவையும்

சேர்த்து

அளித்தேன்

 

துரோணர் :

என்னுடைய

பாக்கியம்

 

சிவன் :

நீங்கள் கேட்ட

வரத்தை

உங்களுக்கு

அளித்து

விட்டேன்

இனி

நடக்கப்

போவதை

இந்த

உலகமே

பார்க்கப்

போகிறது

 

(என்று

சொல்லி

விட்டு

சிவன்

மறைந்து

விட்டார்

வரம்

கிடைத்து

விட்ட மகிழ்ச்சியில்

துரோணர்

வீட்டிற்கு

வந்து

தன்னுடைய

மனைவி

கிருபியைப்

பார்த்து நடந்த

விஷயங்களைச்

சொன்னார்

 

கிருஷ்ணனுக்கே

சாபம்

கொடுத்தவன்

பிறக்கப்

போகிறான்

அவனை

காண்பதற்கு

தயாராகுங்கள்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment