November 06, 2022

ஜபம்-பதிவு-890 மரணமற்ற அஸ்வத்தாமன்-22 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-890

மரணமற்ற

அஸ்வத்தாமன்-22

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

சிவன் :

துரோணரே

உங்களுக்கு என்ன

வரம் வேண்டும்

கேளுங்கள்

 

துரோணர் :

என் மனதில்

என்ன உள்ளதோ

அதை அப்படியே

எனக்கு வரமாகத்

தாருங்கள்

 

சிவன் :

மனிதன் மனதில்

உள்ளதை எல்லாம்

வழங்க வேண்டும்

என்றால்

அதற்கு ஒரு

யுகம் போதாதே

பல யுகங்கள்

தேவைப்படுமே

               

துரோணர் :

என் மனதில்

உள்ளதை எல்லாம்

நான் கேட்கவில்லை

 

எந்த வரத்தை வேண்டி

நான் தங்களை

நோக்கி இருந்தேனோ

அந்த வரத்தைத்

தான் நான்

கேட்கிறேன்

 

சிவன் :

அதை நீங்கள் வாய்

திறந்தே கேட்கலாமே

 

துரோணர் :

மனதில் நினைப்பதைத்

தரமாட்டீர்களா

 

சிவன் :

வாய் விட்டுக் கேட்காத

எந்த ஒரு வரமும்

வழங்கப்படுவதில்லையே

 

துரோணர் :

வாய் விட்டுக்

கேட்டால் தான்

வரம் கிடைக்குமா

 

சிவன் :

மனிதன் தன்னுடைய

மனதில் உள்ளதை

அப்படியே

வார்த்தையில் சொல்ல

அவனால் முடியாது

 

அப்படியே சொன்னாலும்

மாற்றித் தான்

சொல்வான்

அதுவும் தவறாகத்

தான் சொல்வான்

 

மனிதன் மனதில்

ஒன்று நினைப்பான்

அதை வார்த்தையில்

சொல்லும்போது

வேறு ஒன்றாக

மாற்றி சொல்வான்

 

மனிதன் மனதில்

என்ன நினைக்கிறானோ

அதை அப்படியே

அவனால்

சொல்ல முடியாது

 

கோடியில்

ஒருவனால் மட்டுமே

மனதில் என்ன

நினைக்கிறானோ

அதை அப்படியே

வார்த்தையில்

சொல்ல முடியும்

 

அதனால் தான்

உங்களுக்கு

என்ன வரம்

வேண்டும் என்பதை

உங்களுடைய

வார்த்தையிலேயே

கேட்கச் சொல்கிறேன்

 

மனதில் உள்ள

வரத்தை

அப்படியே கேட்டு

பெற்றுக் கொள்ளப்

போகிறீர்களா

அல்லது

மனதில் உள்ள

வரத்தை

மாற்றிச் சொல்லி

வம்பில் மாட்டிக்

கொள்ளப் போகிறீர்களா

என்பது தெரிந்து

விடும் அல்லவா

 

துரோணர் :

என்னை வம்பில்

சிக்க வைக்க

வேண்டும் என்று

நினைக்கிறீர்களா

 

சிவன் :

வரத்தைக் கேட்க

வேண்டியது

உங்களுடைய உரிமை

கொடுக்கும்

உரிமை இருந்தால்

அந்த வரத்தைக்

கொடுக்க வேண்டியது

என்னுடைய கடமை

 

கடவுளை நோக்கி

வரம் வேண்டி

தவம் இருந்த

பலபேர்

கடவுள் நேரில்

தோன்றிய போது

எதை வேண்டி தவம்

இருந்தார்களோ

அதை மறந்து

இடம் நேரம்

காலம் சூழ்நிலை

ஆகியவற்றைப்

பொறுத்தும்

கர்மவினையின்

விளைவைப்

பொறுத்தும்

தேவையில்லாத

வரத்தைக் கேட்டுப்

பெற்று சங்கடத்தில்

மாட்டிக்

கொண்டுள்ளனர்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment