September 24, 2021

சாவேயில்லாத சிகண்டி-4

 ஜபம்-பதிவு-670

(சாவேயில்லாத

சிகண்டி-4)

 

சகுனி செய்த

செலையும்

கிருஷ்ணர் செய்த

செயலையும்

ஒப்பிட்டு

நோக்காமல்

நல்லவர் யார்

கெட்டவர் யார்

என்பதை

அறிவைக் கொண்டு

எழுதுபவர்கள்

சொல்லவில்லை

 

அறிவைக் கொண்டு

எழுதியவர்கள்

கிருஷ்ணரை

நல்லவராகவும்

சகுனியை

கெட்டவராகவும்

தான் எழுதி

வைத்திருக்கின்றனர்

 

கிருஷ்ணர் நல்லவர்

என்று சொல்லலாம்

அதற்காக சகுனியை

கெட்டவர் என்று

சொல்ல முடியாது

 

பாண்டவர்களுக்காக

திட்டங்களை

தீட்டுவதற்கும்

அதனை

செயல் படுத்துவதற்கும்

பீஷ்மர், துரோணர்,

கிருபாச்சாரியார்,

கிருஷ்ணர், விதுரர்

ஆகியோர் இருந்தனர்

ஆனால்

இவர்கள்

அனைவரும்

தீட்டிய

திட்டங்களுக்கும்

செயல்படுத்திய

செயல்களுக்கும்

கௌரவர்கள்

சார்பாக

சிந்தனை செய்வதற்கும்

கௌரவர்களை

காப்பாற்றுவதற்கும்

தன்னந்தனியாக

போராடியது

சகுனி மட்டுமே

 

அத்தகைய ஒரு

ராஜதந்திரியான

சகுனியை எப்படி

கெட்டவன் என்று

சொல்ல முடியும்.

 

பாண்டவர்களுக்காக

பீஷ்மர், துரோணர்,

கிருபாச்சாரியர்,

கிருஷ்ணர், விதுரர்

ஆகிய அனைவரும்

செய்ததைத் தான்

சகுனி

கௌரவர்களுக்காக

தன்னந் தனியாக

செய்தார்

 

அறிவைக் கொண்டு

எழுதியவர்கள்

மகாபாரதக் கதையை

பிரதி எடுத்தவர்கள்

சகுனியை கெட்டவன்

என்று சித்தரித்து

விட்டனர்

 

இங்கே உண்மை

என்பது

மறைக்கப்பட்டு விட்டது

உண்மை

மறைக்கப்பட்டு

விட்டதால்

பொய் என்பது

சர்வ சுதந்திரமாக

உலாவ

வந்து விட்டது

வரலாறை

அறிவை கொண்டு

எழுதினால்

இப்படித்தான்

இருக்கும்

உண்மை இருக்காது

 

உண்மையான

வரலாறு வேண்டும்

என்றால்

உண்மையானவர்களால்

உண்மையைக் கொண்டு

எழுதுபவர்களால்

வரலாறு

எழுதப்பட வேண்டும்

 

உண்மையைக் கொண்டு

எழுதுபவர்கள்

மட்டுமே

வரலாற்றை

உண்மையாக

எழுதுவார்கள்

உண்மையை

மட்டுமே

எழுதுவார்கள்

 

வெற்றி

பெற்றவர்களையும்

தோல்வியுற்றவர்களையும்

சரிசமமாக

பாவித்து

எழுதுவார்கள்

 

யார் பக்கம்

நியாயம் இருக்கிறதோ

அதை பயப்படாமல்

உண்மையாக

எழுதுவார்கள்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

சாவேயில்லாத சிகண்டி-3

 ஜபம்-பதிவு-669

(சாவேயில்லாத

சிகண்டி-3)

 

அறிவைக் கொண்டு

எழுதுபவர்கள்

தோல்வியுற்றவர்களின்

பக்கம் இருக்கும்

நீதியையும்,

நேர்மையையும்,

நியாயத்தையும்

சுட்டிக் காட்டாமல்

ஒரு தலைப்பட்சமாக

வெற்றி

பெற்றவர்களையே

உயர்ந்தவராகக் காட்டி

வரலாற்றை

எழுதி விடுகின்றனர்

இதனால்

உண்மை

மறைக்கப்படுகிறது

வரலாற்றில்

பொய்யானது

வெளிப்படுகிறது

 

அறிவைக் கொண்டு

வரலாற்றை

எழுதுபவர்களால்

வரலாற்றின்

உண்மைத் தன்மை

மறைக்கப்பட்டுத்

தான் இருக்கும்

அதாவது

உண்மைத் தன்மை

இருக்காது,

பொய் தான்

வெளிப்பட்டு இருக்கும்

 

மகாபாரதக் கதையை

எடுத்துக் கொண்டால்

குருஷேத்திரப் போரில்

வெற்றி பெற்ற

பாண்டவர்கள்

நல்லவர்கள் என்றும்

தோல்வியுற்ற

கௌரவர்கள்

கெட்டவர்கள் என்றும்

மகாபாரதக் கதையின்

மூலக் கதையிலிருந்து

பிரதி எடுத்தவர்கள்

தங்களுடைய

அறிவைக் கொண்டு

எழுதும் போது

இப்படித் தான்

எழுதி இருக்கின்றனர்,

 

குருஷேத்திரப் போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெற்றதால்

சிறிய வயது முதலே

பாண்டவர்கள்

நல்லவர்கள் என்று

எழுதுகின்றனர்

 

குருஷேத்திரப் போரில்

கௌரவர்கள்

தோற்றதால்

சிறிய வயது முதலே

கௌரவர்கள்

கெட்டவர்கள் என்று

எழுதுகின்றனர்

 

வெற்றி பெற்றவர்கள்

அனைவரும்

நல்லவர்கள் என்பதும்

தோல்வியுற்றவர்கள்

அனைவரும்

கெட்டவர்கள் என்பதும்

தவறான கருத்தாகும்

 

வெற்றி பெற்றவர்கள்

அனைவரும்

நல்லவர்களும்

கிடையாது

தோல்வியுற்றவர்கள்

அனைவரும்

கெட்டவர்களும்

கிடையாது

 

பாண்டவர்களும்

கௌரவர்களும் ஒரே

விஷயத்திற்காகத் தான்

சண்டையிட்டனர்

தங்களுக்கு

நாடு வேண்டும்

என்று சண்டையிட்டனர்

 

பாண்டவர்கள்

பக்கம்

கிருஷ்ணர் இருந்தார்

கௌரவர்கள் பக்கம்

சகுனி இருந்தார்

பாண்டவர்களுக்காக

கிருஷ்ணர்

என்ன செய்தாரோ

அதையே தான்

கௌரவர்களுக்காக

சகுனி செய்தார்

 

துரியோதனனை

அரியணையில்

ஏற்றுவதற்காக

சூது, வஞ்சனை,

துரோகம், ஏமாற்றுதல்,

போன்றவற்றை

சகுனி எப்படி

பயன் படுத்தினாரோ

அதையே தான்

பாண்டவர்களுக்காக

கிருஷ்ணரும்

பயன்படுத்தினார்

அப்படி

இருக்கும் போது

கடவுள் என்பதற்காக

கிருஷ்ணரை

நல்லவர் என்றும்

சகுனி கெட்டவர்

என்றும்

சித்தரிக்கப்பட்டு

அறிவைக் கொண்டு

எழுதுபவர்களால்

நடைமுறைப்

படுத்தப்பட்டு

இருக்கிறது,

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

சாவேயில்லாத சிகண்டி-2

 ஜபம்-பதிவு-668

(சாவேயில்லாத

சிகண்டி-2)

 

இதில் கஷ்டம்

என்னவென்றால்

எது அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாறு

எது உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாறு

என்று கண்டு

பிடிப்பது தான்

 

எது அறிவு கொண்டு

எழுதப்பட்ட வரலாறு

எது உண்மை கொண்டு

எழுதப்பட்ட வரலாறு

என்று புரிந்து

கொள்பவர்களால்

மட்டுமே

உண்மையான

வரலாறு எது

பொய்யான

வரலாறு எது

என்பதைத் தெரிந்து

கொள்ள முடியும்

இல்லை என்றால்

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

பொய்யான

வரலாற்றைத் தான்

தெரிந்து

கொள்ள முடியும்

 

வரலாற்றில்

உண்மையான

வரலாறு மட்டும்

தான் தெரிய

வேண்டுமே ஒழிய

ஒருவருடைய அறிவு

தெரியக் கூடாது

அப்படி தெரிந்தால்

அது உண்மையற்ற

வரலாறாகத்

தான் இருக்கும்.

 

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

ஒருவரையோ

(அல்லது)

பல பேரையோ

(அல்லது)

ஒரு நாட்டையோ

வீழ்த்தி வெற்றி

பெற்றவர்கள் தான்

நல்லவர்களாக

சித்தரிக்கப்பட்டு

வந்திருக்கிறார்கள்

தோல்வியுற்றவர்கள்

கெட்டவர்களாகத் தான்

சித்தரிக்கப்பட்டு

வந்திருக்கிறார்கள்.

 

வெற்றி பெற்ற

காரணத்தினால்

மட்டுமே

வெற்றி பெற்றவர்களை

நல்லவர்கள் என்று

சொல்லி

விட முடியாது

அதே சமயத்தில்

தோல்வியுற்ற

காரணத்தினால்

மட்டுமே

தோல்வியுற்றவர்களை

கெட்டவர்கள் என்றும்

சொல்லி விட

முடியாது.

 

வெற்றி

பெற்றவர்களை

நல்லவர்களாகவும்

தோல்வியுற்றவர்களை

கெட்டவர்களாகவும்

சித்தரித்துக் காட்டுவது

என்பது

வரலாற்றை

அறிவு கொண்டு

எழுதுபவர்களால்

காலம் காலமாக

நடைமுறைப்

படுத்தப்பட்டு

வந்திருக்கிறது.

 

வரலாற்றின்

பக்கங்களைத் தன்

அறிவு கொண்டு

நிரப்புவர்களால்

தீட்டப்படும் வரலாறு

எழுதுபவரின்

அறிவால்

நிரப்பப்படுவதால்

வரலாறானது

எழுதுபவரின்

அறிவாகவே

இருக்கிறது

 

வரலாற்றை

அறிவு கொண்டு

எழுதுபவர்கள்

வெற்றி பெற்றவர்களை

நல்லவர்களாகவும்,

தோல்வியுற்றவர்களை

கெட்டவர்களாகவும்

தான் காட்டுகின்றனர்

 

வெற்றி பெற்றவர்களின்

திறமைகளை

எழுதுபவர்கள்

தோல்வியுற்றவர்களின்

திறமைகளைப் பற்றி

எழுதுவதே கிடையாது

 

அறிவைக்  கொண்டு

எழுதுபவர்கள்

வெற்றி பெற்றவர்களையும்

தோல்வியுற்றவர்களையும்

சம நிலையில் வைத்து

எழுதுவதே இல்லை.

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

சாவேயில்லாத சிகண்டி-1

 ஜபம்-பதிவு-667

(சாவேயில்லாத

சிகண்டி-1)

 

வரலாற்றின்

நுழைவுக் கதவானது

யாராலும் எளிதில்

நுழைய முடியாத படி

சாத்தப்பட்டு

திறக்க முடியாத

பூட்டினால்

பூட்டப் பட்டுள்ளது.

 

வரலாற்றின்

நுழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள பூட்டினைத்

திறக்கக்கூடிய

சரியான சாவி

எது என்று

தெரிந்து

வைத்திருக்க

வேண்டும்.

 

அவ்வாறு தெரிந்து

வைத்திருப்பவர்களால்

மட்டுமே

வரலாற்றின்

நுழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள

பூட்டினைத் திறந்து

உள்ளே நுழைந்து

வரலாற்றின்

நிகழ்வுகளைத்

தெரிந்து கொள்ள

முடியும்

 

அந்தக் காலம்

முதல்

இந்தக் காலம்

வரை

வரலாற்றின்

நு6ழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள

பூட்டினைத் திறப்பதற்கு

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

இரண்டே இரண்டு

சாவிகளை

மட்டுமே

பயன்படுத்தி

வந்திருக்கின்றனர்.

 

ஒன்று :

அறிவு என்ற

சாவியைப்

பயன்படுத்தி

வந்திருக்கின்றனர்.

 

இரண்டு :

உண்மை என்ற

சாவியைப்

பயன்படுத்தி

வந்திருக்கின்றனர்.

 

வரலாற்றின்

நுழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள பூட்டினை

அறிவு என்ற சாவி

கொண்டு திறப்பவர்கள்

தங்களுடைய

அறிவையே

வரலாற்றின்

நிகழ்வுகளாகப்

பதிவு செய்கின்றனர்

ஆனால்,

வரலாற்றின்

நுழைவுக் கதவினைப்

பூட்டியுள்ள பூட்டினை

உண்மை என்ற

சாவி கொண்டு

திறப்பவர்கள்

உண்மையான

வரலாற்றையே

வரலாறாக பதிவு

செய்கின்றனர்.

 

இந்த

உலகத்தில் உள்ள

பெரும்பாலான

வரலாறுகள்

அனைத்தும்

அறிவினால் எழுதப்

பட்டவைகளாகத் தான்

இருக்கின்றன

உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாறுகள் மிகவும்

குறைவாகத் தான்

இருக்கின்றன.

 

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

எழுதப்பட்டவரின்

அறிவே

எல்லா இடங்களிலும்

நிரம்பி இருக்கும்

ஆனால்

உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

எல்லா இடங்களிலும்

உண்மை மட்டுமே

நிரம்பி இருக்கும்.

 

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றுக்கும்

உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றுக்கும்

சிறிதளவு

வித்தியாசம் தான்

இருக்கிறது.

அறிவு கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

பொய் மட்டும் தான்

இருக்கும்

அதாவது

உண்மை என்பது

இருக்காது

ஆனால்

உண்மை கொண்டு

எழுதப்பட்ட

வரலாற்றில்

உண்மை

மட்டும் தான்

இருக்கும்

பொய் என்பது

இருக்காது

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////