September 24, 2021

சாவேயில்லாத சிகண்டி-3

 ஜபம்-பதிவு-669

(சாவேயில்லாத

சிகண்டி-3)

 

அறிவைக் கொண்டு

எழுதுபவர்கள்

தோல்வியுற்றவர்களின்

பக்கம் இருக்கும்

நீதியையும்,

நேர்மையையும்,

நியாயத்தையும்

சுட்டிக் காட்டாமல்

ஒரு தலைப்பட்சமாக

வெற்றி

பெற்றவர்களையே

உயர்ந்தவராகக் காட்டி

வரலாற்றை

எழுதி விடுகின்றனர்

இதனால்

உண்மை

மறைக்கப்படுகிறது

வரலாற்றில்

பொய்யானது

வெளிப்படுகிறது

 

அறிவைக் கொண்டு

வரலாற்றை

எழுதுபவர்களால்

வரலாற்றின்

உண்மைத் தன்மை

மறைக்கப்பட்டுத்

தான் இருக்கும்

அதாவது

உண்மைத் தன்மை

இருக்காது,

பொய் தான்

வெளிப்பட்டு இருக்கும்

 

மகாபாரதக் கதையை

எடுத்துக் கொண்டால்

குருஷேத்திரப் போரில்

வெற்றி பெற்ற

பாண்டவர்கள்

நல்லவர்கள் என்றும்

தோல்வியுற்ற

கௌரவர்கள்

கெட்டவர்கள் என்றும்

மகாபாரதக் கதையின்

மூலக் கதையிலிருந்து

பிரதி எடுத்தவர்கள்

தங்களுடைய

அறிவைக் கொண்டு

எழுதும் போது

இப்படித் தான்

எழுதி இருக்கின்றனர்,

 

குருஷேத்திரப் போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெற்றதால்

சிறிய வயது முதலே

பாண்டவர்கள்

நல்லவர்கள் என்று

எழுதுகின்றனர்

 

குருஷேத்திரப் போரில்

கௌரவர்கள்

தோற்றதால்

சிறிய வயது முதலே

கௌரவர்கள்

கெட்டவர்கள் என்று

எழுதுகின்றனர்

 

வெற்றி பெற்றவர்கள்

அனைவரும்

நல்லவர்கள் என்பதும்

தோல்வியுற்றவர்கள்

அனைவரும்

கெட்டவர்கள் என்பதும்

தவறான கருத்தாகும்

 

வெற்றி பெற்றவர்கள்

அனைவரும்

நல்லவர்களும்

கிடையாது

தோல்வியுற்றவர்கள்

அனைவரும்

கெட்டவர்களும்

கிடையாது

 

பாண்டவர்களும்

கௌரவர்களும் ஒரே

விஷயத்திற்காகத் தான்

சண்டையிட்டனர்

தங்களுக்கு

நாடு வேண்டும்

என்று சண்டையிட்டனர்

 

பாண்டவர்கள்

பக்கம்

கிருஷ்ணர் இருந்தார்

கௌரவர்கள் பக்கம்

சகுனி இருந்தார்

பாண்டவர்களுக்காக

கிருஷ்ணர்

என்ன செய்தாரோ

அதையே தான்

கௌரவர்களுக்காக

சகுனி செய்தார்

 

துரியோதனனை

அரியணையில்

ஏற்றுவதற்காக

சூது, வஞ்சனை,

துரோகம், ஏமாற்றுதல்,

போன்றவற்றை

சகுனி எப்படி

பயன் படுத்தினாரோ

அதையே தான்

பாண்டவர்களுக்காக

கிருஷ்ணரும்

பயன்படுத்தினார்

அப்படி

இருக்கும் போது

கடவுள் என்பதற்காக

கிருஷ்ணரை

நல்லவர் என்றும்

சகுனி கெட்டவர்

என்றும்

சித்தரிக்கப்பட்டு

அறிவைக் கொண்டு

எழுதுபவர்களால்

நடைமுறைப்

படுத்தப்பட்டு

இருக்கிறது,

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

No comments:

Post a Comment