September 24, 2021

சாவேயில்லாத சிகண்டி-4

 ஜபம்-பதிவு-670

(சாவேயில்லாத

சிகண்டி-4)

 

சகுனி செய்த

செலையும்

கிருஷ்ணர் செய்த

செயலையும்

ஒப்பிட்டு

நோக்காமல்

நல்லவர் யார்

கெட்டவர் யார்

என்பதை

அறிவைக் கொண்டு

எழுதுபவர்கள்

சொல்லவில்லை

 

அறிவைக் கொண்டு

எழுதியவர்கள்

கிருஷ்ணரை

நல்லவராகவும்

சகுனியை

கெட்டவராகவும்

தான் எழுதி

வைத்திருக்கின்றனர்

 

கிருஷ்ணர் நல்லவர்

என்று சொல்லலாம்

அதற்காக சகுனியை

கெட்டவர் என்று

சொல்ல முடியாது

 

பாண்டவர்களுக்காக

திட்டங்களை

தீட்டுவதற்கும்

அதனை

செயல் படுத்துவதற்கும்

பீஷ்மர், துரோணர்,

கிருபாச்சாரியார்,

கிருஷ்ணர், விதுரர்

ஆகியோர் இருந்தனர்

ஆனால்

இவர்கள்

அனைவரும்

தீட்டிய

திட்டங்களுக்கும்

செயல்படுத்திய

செயல்களுக்கும்

கௌரவர்கள்

சார்பாக

சிந்தனை செய்வதற்கும்

கௌரவர்களை

காப்பாற்றுவதற்கும்

தன்னந்தனியாக

போராடியது

சகுனி மட்டுமே

 

அத்தகைய ஒரு

ராஜதந்திரியான

சகுனியை எப்படி

கெட்டவன் என்று

சொல்ல முடியும்.

 

பாண்டவர்களுக்காக

பீஷ்மர், துரோணர்,

கிருபாச்சாரியர்,

கிருஷ்ணர், விதுரர்

ஆகிய அனைவரும்

செய்ததைத் தான்

சகுனி

கௌரவர்களுக்காக

தன்னந் தனியாக

செய்தார்

 

அறிவைக் கொண்டு

எழுதியவர்கள்

மகாபாரதக் கதையை

பிரதி எடுத்தவர்கள்

சகுனியை கெட்டவன்

என்று சித்தரித்து

விட்டனர்

 

இங்கே உண்மை

என்பது

மறைக்கப்பட்டு விட்டது

உண்மை

மறைக்கப்பட்டு

விட்டதால்

பொய் என்பது

சர்வ சுதந்திரமாக

உலாவ

வந்து விட்டது

வரலாறை

அறிவை கொண்டு

எழுதினால்

இப்படித்தான்

இருக்கும்

உண்மை இருக்காது

 

உண்மையான

வரலாறு வேண்டும்

என்றால்

உண்மையானவர்களால்

உண்மையைக் கொண்டு

எழுதுபவர்களால்

வரலாறு

எழுதப்பட வேண்டும்

 

உண்மையைக் கொண்டு

எழுதுபவர்கள்

மட்டுமே

வரலாற்றை

உண்மையாக

எழுதுவார்கள்

உண்மையை

மட்டுமே

எழுதுவார்கள்

 

வெற்றி

பெற்றவர்களையும்

தோல்வியுற்றவர்களையும்

சரிசமமாக

பாவித்து

எழுதுவார்கள்

 

யார் பக்கம்

நியாயம் இருக்கிறதோ

அதை பயப்படாமல்

உண்மையாக

எழுதுவார்கள்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

No comments:

Post a Comment