September 24, 2021

சாவேயில்லாத சிகண்டி-5

 ஜபம்-பதிவு-671

(சாவேயில்லாத

சிகண்டி-5)

 

தோல்வியுற்றவர்கள்

பக்கம் இருக்கும்

நீதி, நேர்மை,

நியாயத்தையும்,

வீரம், தியாகம்,

அன்பு, கருணை,

ஆகியவற்றின்

உண்மைத்

தன்மையினை

உணர்ந்து

எழுதுவார்கள்,

 

எது சரியானது

எது தவறானது

எது காலத்தால்

மறைக்கப்பட்டு

இருக்கிறது

எது காலத்தால்

சொல்லப்படாமல்

இருக்கிறது

என்று ஆராய்ந்து

எழுதுவார்கள்

 

வரலாற்றை

உண்மையாக

எழுதுபவர்களால்

மட்டுமே

வரலாறானது

உண்மைத்

தன்மையுடன்

இருக்கும்

 

வரலாறு

அறிவுத் தன்மையுடன்

எழுதப்பட்டிருக்கிறதா

(அல்லது)

உண்மைத்

தன்மை அற்று

எழுதப்பட்டிருக்கிறதா

என்று முதலில்

அறிந்து

கொள்ள வேண்டும்

 

வேறுபடுத்தி

அறிந்து கொள்ளும்

திறமை

படைத்தவர்களால்

மட்டுமே

உண்மையான

வரலாற்றைப்

படிக்க முடியும்

 

வேறுபடுத்தி அறிய

முடியாதவர்களால்

உண்மையான

வரலாற்றை

அறிந்து படிக்க

முடியாது

 

உண்மையான

வரலாறு எது

என்று தெரிந்து

கொண்டு படிக்க

ஆரம்பித்தால்

உண்மையான

வரலாறு எது

என்று உணர்ந்து

கொள்ள முடியும்

 

இதனை

மனதில் கொண்டு

வேறுபடுத்தி

அறியும் திறனை

வளர்த்துக் கொண்டு

வரலாற்றை

படிக்கத்

தொடங்குங்கள்

 

வரலாறு

உங்களுக்காக

காத்துக்

கொண்டிருக்கிறது

 

மகாபாரதம்

என்று

எடுத்துக் கொண்டால்

ஒரு சில

பெயர்கள்

மட்டுமே

மக்கள் மத்தியில்

கொண்டு

செல்லப்பட்டு

இருக்கிறது

 

பெரும்பாலான

பெயர்கள்

மக்கள் மத்தியில்

கொண்டு

செல்லப்

படாமலேயே

இருக்கிறது

 

இதனால்

மகாபாரதத்தில்

திறமை வாய்ந்த

பல கதாபாத்திரங்கள்

மக்கள்

மன்றத்திற்கு கொண்டு

செல்லப் படாமல்

மறைந்தே இருக்கிறது

 

சிறிய கதாபாத்திரம்

என்று தவறாக

நினைத்துக் கொண்டு

முக்கிய

கதாபாத்திரங்கள்

மறைக்கப்பட்டு

இருக்கிறது

 

அதில்

ஒரு

கதாபாத்திரம் தான்

 

வீரம்

செறிந்த

கதாபாத்திரம் தான்

 

உணர்வுகள்

மேலிட்ட

கதாபாத்திரம் தான்

 

உறவுகளுடன்

பிணைக்கப்பட்ட

கதாபாத்திரம் தான்

 

உரிமைக்காக

போராடிய

கதாபாத்திரம் தான்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

No comments:

Post a Comment