September 24, 2021

சாவேயில்லாத சிகண்டி-7

 ஜபம்-பதிவு-673

(சாவேயில்லாத

சிகண்டி-7)

 

தாய்

சத்தியவதியின்

அழைப்பை ஏற்று

ஒருவர் விரைந்து

நடந்து சென்று

கொண்டிருந்தார்

தேவவிரதன் என்ற

பெயர்

சூட்டப் பெற்றவர்

 

சாந்தனு

மன்னனுக்கும்

கங்கைக்கும்

மகனாகப்

பிறந்தவர்

 

போர்க்

கலைகளையும்

வித்தைகளையும்

பரசுராமரிடம்

இருந்து

கற்றவர்

 

கங்கையை

கணை கொண்டு

தடுக்கும்

அளவிற்கு

திறமைசாலியாக

இருந்தவர்

 

குழந்தைப்

பருவம்

முதல்

தன் தாயான

கங்கையின்

அரவணைப்பில்

வாழ்ந்து

வந்தவர்

 

பருவ வயதை

எட்டிய பின்

தன் தந்தையான

சாந்தனு

மன்னனிடம்

வந்தவர்

 

அஸ்தினாபுரத்திற்காகவே

இரண்டு

சபதங்களை

எடுத்தவர்

 

தன் தந்தைக்கு

அவர் விரும்பிய

மீனவ பெண்ணான

சத்தியவதியை

மணம் முடித்து

வைக்க தன்

வாழ்நாள்

முழுவதும்

பிரம்மச்சரியத்தை

கடைபிடிப்பேன்

என்று சபதம்

எடுத்தவர்

 

குருவம்சத்தைக்

காக்க அதன்

அரியணையில்

யார்

அமர்ந்தாலும்

அவர்களுக்கு

விசுவாசமாக

இருப்பேன்

என்று

சபதம்

எடுத்தவர்

 

தனக்காக

தன் மகன்

செய்த

தியாகத்தைக்

கண்டு

சாந்தனு

மன்னன்

தேவவிரதனுக்கு

அவர் விரும்பும்

நேரத்தில் தான்

மரணம் வரும்

என்ற வரத்தை

அளித்து

அந்த வரத்தை

தேவவிரதன்

பெற்றதினால்

தேவைப்படும்

நேரத்தில்

மரணத்தை

தழுவலாம்

என்ற

நினைப்பில்

வாழ்ந்து

கொண்டிருந்தவர்

 

அவர் தான்

அஸ்தினாபுரத்தின்

தலைமகன் தான்

 

அனைவராலும்

மரியாதையுடன்

நடத்தப்பட்டவர் தான்

 

அவர் தான்

பீஷ்மர்

பீஷ்மர்

பீஷ்மர்

 

தாய் சத்தியவதி

அழைப்பை ஏற்று

அவரை பார்க்க

விரைந்து

நடந்து சென்று

கொண்டிருந்தார்

 

----------- ஜபம் இன்னும் வரும்

 

_______ எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-09-2021

/////////////////////////////////

 

No comments:

Post a Comment