April 26, 2020

பரம்பொருள்-பதிவு-209


               ஜபம்-பதிவு-457
             (பரம்பொருள்-209)

தர்மர் :
“அரவானுடைய உடல்
இருக்கும் இடத்தில்
அரவானுக்கு
செய்ய வேண்டிய
ஈமச்சடங்குகளை
யார் செய்வார்கள் ?“

“அந்த இடத்தில்
ஈமச் சடங்குகளைச்
செய்வதற்கு யார்
இருக்கிறார்கள் ?“

“அதற்கு ஏதேனும்
ஏற்பாடுகளை நீங்கள்
செய்து இருக்கிறீர்களா ? “

கிருஷ்ணன் :
“அதற்கு நான்
எந்தவிதமான
ஏற்பாட்டையும்
செய்யவில்லை  ;
எந்தவிதமான
ஏற்பாட்டையும் நான்
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை “

“அரவானுடைய
உடலுக்கு செய்ய
வேண்டிய
ஈமச் சடங்குகளைச்
செய்வதற்கு
அரவானுடைய
மனைவி இருக்கிறாள் “

தர்மர் :
“என்னது
அரவானுடைய
மனைவியா ? “

கிருஷ்ணன் :
“ஆமாம் ! அரவானுடைய
மனைவி தான் “

“அரவானுடைய
மனைவி தான்
அரவானுக்கு
செய்ய வேண்டிய
ஈமச் சடங்குகளைச்
செய்யப் போகிறாள் “

“அரவான்
களப்பலியாவதற்கு
முன்பு அரவானுக்குத்
திருமணம் நடந்து
விட்டது என்பது
உங்களுக்குத் தெரியும் “

“அரவானுடைய வாரிசாக
அரவானுடைய
மனைவி இருக்கிறாள்  

“எனவே, அரவானுடைய
உடலுக்கு செய்ய
வேண்டிய அனைத்து
ஈமச் சடங்குகளையும்
அரவானுடைய
மனைவியே செய்வாள் ‘

“அரவான் கேட்டுக்
கொண்டபடியே
அனைத்தும் நடக்கும் ‘

“அரவான் கேட்டுக்
கொண்டபடியே அனைத்தும்
நடக்கப் போகிறது  

தர்மர் :
“அரவான் என்ன
கேட்டான் ? “

கிருஷ்ணன் :
“தான் இறந்த பிறகு
தன்னை கணவன்
என்று சொல்லி
தன்னுடைய பிணத்தை
கட்டிபிடித்து கதறி
அழுவதற்கு
மனைவியாக இந்த
உலகத்தில் தனக்கு
ஒரு உறவு இருக்க
வேண்டும் என்றும் ;
தான் இறந்த பிறகு
தன்னுடைய
இறுதிச் சடங்கை
உரிமை கொண்டாடி
செய்து முடிப்பதற்கு
மனைவி
என்ற முறையில்
ஒரு பெண் இருக்க
வேண்டும் என்றும் ;
அதற்கு தான்
ஒரு பெண்ணை
திருமணம்
செய்து கொண்டு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க
வேண்டும் என்றும்  ;
அரவான் என்னிடம்
முதல் வரத்தைக்
கேட்டான் “

“அரவான் கேட்டுக்
கொண்டபடியே அரவான்
களப்பலியாவதற்கு
முன்பு அரவானுடைய
முதல் வரத்தை
நிறைவேற்றி விட்டேன் “

“முதல் வரத்தின்
தொடர்ச்சியாக
அரவான் கேட்டுக்
கொண்டபடி
இப்போது
அரவானுடைய
உடலைக் கட்டிப்பிடித்து
கதறி அழுது
ஈமச் சடங்குகளைச்
செய்வதற்கு
அரவானுடைய
மனைவி இருக்கிறாள் “

“அரவானுடைய
மனைவி
அரவானுக்கு செய்ய
வேண்டிய அனைத்து
ஈமச் சடங்குகளையும்
செய்வாள் “

“நீங்கள் அரவானை
தகனம் செய்வதற்கு
தேர்ந்தெடுத்த இடத்தில்
அரவானை தகனம்
செய்வதற்கு
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்து முடித்து விட்டு
அரவான் இருக்கும்
இடத்திற்கு செல்லுங்கள் “

“அந்த இடத்தில்
அரவானுடைய மனைவி
தன்னுடைய கணவனுக்கு
செய்ய வேண்டிய
அனைத்து ஈமச்
சடங்குகளையும்
செய்து முடித்திருப்பாள் “

“அந்த இடத்திற்கு சென்று
அரவானுடைய உடலை
கொண்டு சென்று
தகனம் செய்யுங்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment