April 26, 2020

பரம்பொருள்-பதிவு-210


               ஜபம்-பதிவு-458
             (பரம்பொருள்-210)

தர்மர் :
“நீங்கள் எங்கே
இருப்பீர்கள் ? “

கிருஷ்ணன் :
“இப்போது நான் ஒரு
முக்கியமான இடத்தில்
இருக்க வேண்டும்  

“அந்த இடத்தில்
ஒரு முக்கியமான
கடமையை நிறைவேற்ற
வேண்டிய பொறுப்பு
எனக்கு இருக்கிறது “

“அந்த கடமையை
நிறைவேற்றுவதற்காக
உடனே நான்
செல்ல வேண்டும்  

“அந்த இடத்தில்
நான் இருக்க
வேண்டிய கட்டாயம்
இருக்கிறது “

“எனக்கென்று
ஒதுக்கப்பட்ட
கடமையை நான்
கண்டிப்பாக
நிறைவேற்றியாக
வேண்டும் “

“எனக்காக ஒரு
வேலை காத்துக்
கொண்டிருக்கிறது “

“நான் எங்கே
செல்லப் போகிறேன்
என்ன செய்யப்
போகிறேன்
என்பதைப் பற்றி
எல்லாம் - நீங்கள்
ஆராய்ச்சி
செய்ய வேண்டாம் ;
யோசித்துக் கொண்டு
நேரத்தை வீணடித்துக்
கொண்டிருக்க வேண்டாம் ;
நான் செய்ய
வேண்டிய கடமையை
செய்யப் போகிறேன் ;
உங்களுக்கென்று நான்
ஒதுக்கிய கடமையை
செயல் படுத்துங்கள் ;“

தர்மர் :
“நீங்கள் இல்லாமல்
எந்தவொரு
விஷயத்தையும் - நாங்கள்
செய்ததில்லையே
இப்போது நீங்கள்
இல்லாமல்
நாங்கள் மட்டும்
இந்த விஷயத்தை
எப்படி செய்ய முடியும் “

“எங்களால்
செய்ய முடியுமா ? “

கிருஷ்ணன் :
“உங்களால்
செய்ய முடியும்  

“உங்களால் செய்ய
முடியும் என்ற
காரணத்திற்காகவும்  ;
அந்த கடமையை
நீங்கள் தான்
செய்ய வேண்டும் என்ற
காரணத்திற்காகாவும் தான்
இந்த விஷயத்தை
உங்களிடம்
ஒப்படைத்தேன் “

“நான் காட்டிய
வழியைப் பின்பற்றி
உங்களிடம் நான்
ஒப்படைத்த
கடமையை
நிறைவேற்றுங்கள் “

“நான் இல்லாமல்
நீங்கள் எந்தவொரு
செயலையும்
செய்வதாக நீங்கள்
நினைக்க வேண்டாம் “

“நான் இல்லாமல்
நீங்கள் எந்தவொரு
செயலையும் நீங்கள்
செய்யப் போவதில்லை “

தர்மர் :
“அப்படி என்றால்
அரவானுடைய
தகனத்தில்
நீங்கள் இருக்கப்
போவதில்லையா ? “

கிருஷ்ணன் :
“நான் எல்லா
இடத்திலும் இருந்து
கொண்டிருக்கிறேன் “

“இந்த உலகத்தில்
உள்ள அனைத்து
பொருட்களிலும்
நான் இருந்து
கொண்டு தான்
இருக்கிறேன் “

“பஞ்ச பாண்டவர்களாகிய
உங்களுக்குள்ளும்
நான் இருக்கிறேன் “

“அரவானுடைய
மனைவியின்
உடலிலும் நான்
இருக்கிறேன் “

“அதை நீங்கள்
உணர்ந்து
கொண்டீர்களா
என்று எனக்குத்
தெரியவில்லை “

“நான் உங்களுக்குள்
இருப்பதை - நீங்கள்
உணர்ந்து கொள்ளாத
போது எப்படி - நான்
அரவானின் மனைவியாக
இருப்பதை உங்களால்
எப்படி உணர்ந்து
கொள்ள முடியும் “

“ஆகவே நீங்கள்
சென்று உங்களுக்கு
ஒப்படைக்கப்பட்ட
கடமையைச் செய்யுங்கள்”

“நான் என்னுடைய
கடமையை
நிறைவேற்ற வேண்டும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment