April 26, 2020

பரம்பொருள்-பதிவு-213


               ஜபம்-பதிவு-461
              (பரம்பொருள்-213)

“அவளையும் அறியாமல்
அவளுடைய கண்களில்
இருந்து கண்ணீர்
வழியத் தொடங்கியது ”

“வந்தவர்கள்
பஞ்ச பாண்டவர்கள்
என்பதை உணர்ந்து
கொண்டு - அரவானுடைய
உடலை விட்டு எழுந்து
நின்று தனியாக ஓர்
ஓரமாக சென்று தள்ளி
நின்று கொண்டாள் “

“தன்னுடைய வாயை
தன்னுடைய சேலைத்
தலைப்பாள் மூடி தனக்குள்
அழத் தொடங்கினாள்”

“அனைவரும் அழுது
கொண்டிருந்த அரவானின்
மனைவியைப் பார்த்தனர் “

தர்மர் :
“இந்த நிலையில் உனக்கு
ஆறுதலாக நாங்கள்
ஒன்றே ஒன்றைத் தான்
செய்ய முடியும் ;- அது
அரவானுடைய உடலை
தகனம் செய்வது தான்  ;
அரவானுடைய உடலை
தகனம் செய்வதற்கு
கொண்டு செல்ல
எங்களுக்கு அனுமதி
வழங்க வேண்டும் “

“உன்னுடைய சம்மதத்திற்காகக்
காத்துக் கொண்டிருக்கிறோம் “

“நீ சொன்னால் அடுத்து
நடக்க வேண்டிய
காரியங்களைச் செய்வோம் “

“நாங்கள் அரவானுடைய
உடலை எடுத்துக்கொண்டு
செல்லலாமா என்று
கேட்டவுடன் திருநங்கை
அவர்கள் அனைவரைம்
ஏறெடுத்துப் பார்த்தாள் “

“அரவானுடைய இரத்தம்
அவள் முகம் முழுவதும்
படர்ந்து இருந்ததால் அந்த
திருநங்கையின் முகத்தை
அவர்களால் சரியாக
பார்க்க முடியவில்லை “

“திருநங்கை அனுமதி
அளித்ததை அவளுடைய
செய்கையின் மூலம்
உணர்ந்து கொண்ட
பஞ்ச பாண்டவர்கள்
அரவானை
மரியாதையுடன் தூக்கி
கொண்டு தகனம் செய்ய
வேண்டிய இடம் நோக்கி
சென்று கொண்டிருந்தனர் “

“பஞ்ச பாண்டவர்கள்
அரவானுடைய உடலைச்
சுமந்து சென்றதால் அரவான்
சிறப்பு பெற்றான் என்று
சொல்ல முடியாது “

“அரவானுடைய உடலைச்
சுமந்து சென்றதால்
பஞ்சபாண்டவர்கள் தான் 
சிறப்பு பெற்றனர் “

“அரவானை சுமந்து சென்ற
பஞ்ச பாண்டவர்களையும்
அரவானுடைய உடலையும்
பார்த்துக் கொண்டே
நின்று கொண்டிருந்தாள்
அரவானுடைய மனைவியான
அந்தத் திருநங்கை”

“அரவானுடைய உடல்
தன்னுடைய கண்களை
விட்டு நீங்கும் வரை
அரவானுடைய உடலைப்
பார்த்துக் கொண்டே
இருந்தாள் அந்த திருநங்கை “

“அரவானுடைய உடல்
தன்னுடைய பார்வையில்
இருந்து மறைந்ததும்
சிறிது நேரம் அந்த
இடத்தில் நின்று
கொண்டிருந்த அந்த
திருநங்கை அந்த இடத்தை
விட்டு அகன்றாள் “

“நன்றாக குளித்தாள் ;
வெள்ளை புடவையை
உடுத்திக் கொண்டாள் ;”
அரவான் இறந்ததால்
அரவானின் மனைவியான
அந்த திருநங்கை
வெள்ளைப் புடவை உடுத்தி
விதவைக் கோலம் பூண்டாள் ; “

“அரவானைக் கொண்டு சென்ற
பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும் அரவானை
தகனம் செய்வதற்கு
வேண்டிய அனைத்து
ஏற்பாடுகளையும்
முடித்து விட்டனர் “

தர்மர் :
“அர்ஜுனா ! நீ தான்
கொள்ளி வைக்க வேண்டும் “

“அர்ஜுனா ! வந்து
உன்னுடைய மகனுக்கு
உன்னுடைய கைகளால்
கொள்ளி வை “

“அர்ஜுனன் வருகிறான்  ;
கொள்ளி வைக்கிறான் ; “
அரவானின் உடல்
எரியத் தொடங்கியது “

“தானமாக தன்னுடைய
உயிரையே தந்தவனுடைய
உடல் அக்கினியில்
எரிந்து கொண்டிருந்தது “

“பிறருக்காக தன்னையே
தந்தவனுடைய உடல்
அக்கினியில்
எரிந்து கொண்டிருந்தது “

“சுயநலம் இல்லாமல்
பொது நலமாக
செயல்பட்டவனுடைய
உடல் அக்கினியில்
எரிந்து கொண்டிருந்தது “

“மக்கள் நலமாக வாழ
வேண்டும் என்பதற்காக
தன்னையே தந்தவனுடைய
உடல் அக்கினியில்
எரிந்து கொண்டிருந்தது “

“அரவானுடைய தகனக்
கிரியைகள் அனைத்தையும்
செய்து முடித்து விட்டு
பஞ்ச பாண்டவர்கள்
ஐவரும் குளித்து முடித்து
குருசேஷத்திரப்
போருக்கு தயாராயினர் “

“வெள்ளைப் புடவையில்
இருந்த திருநங்கை
கிருஷ்ணனாக மாறினார் ;
குருஷேத்திரப்
போருக்கு தயாரானார் ; “

“பஞ்ச பாண்டவர்களும்
கிருஷ்ணனும்
குருஷேத்திரப்
போருக்கு தயாராயினர் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment