April 26, 2020

பரம்பொருள்-பதிவு-211


               ஜபம்-பதிவு-459
             (பரம்பொருள்-211)

“என்னைப் பற்றி
கவலைப்படாதீர்கள்  ;
என்னைத் தேட
முயற்சி செய்யாதீர்கள் ;
நான் எங்கிருக்கிறேன்
என்பதை ஆராய்ச்சி
செய்ய முயற்சி
செய்யாதீர்கள் ;”

“உங்களுடைய
கடமையை நீங்கள்
செய்யுங்கள் “

“அரவானுடைய மனைவி
அரவானுக்கு
செய்ய வேண்டிய
கடமையைச் செய்வாள் “

“நான் செல்ல
வேண்டிய நேரம்
வந்து விட்டது “

“காலம் நெருங்கி
விட்டது “

“நான் செல்கிறேன் “

“நான் சொன்னவைகள்
அனைத்தையும்
மனதில் கொண்டு
செய்யுங்கள் “

(என்று சொல்லி விட்டு
கிருஷ்ணன் அரவான்
உடல் இருக்கும்
இடத்திற்கு சென்றார் )

“அரவானுடைய உடல்
அருகே சென்ற
கிருஷ்ணன்
திருநங்கையாக
மாறினார் “

“அரவானுடைய
மனைவியான திருநங்கை
அரவானுடைய உடல்
மீது விழுந்து
அழத் தொடங்கினாள் “

திருநங்கை :
“நீங்கள் போய்
வருகிறேன் என்று
சொன்னால் உங்களுக்காக
நான் காத்துக்
கொண்டிருப்பேன்
என்ற காரணத்திற்காக
சொல்லாமல்
சென்று விட்டீர்களா ! “

“நீங்கள் சொல்லாமல்
சென்று விட்டாலும்
நான் உங்களுக்காக
எப்போதும் காத்துக்
கொண்டிருப்பேன்
என்பதை அறிந்து
கொள்ளாமல்
சென்று விட்டீர்களே ! “

“நாட்டை ஆளும்
மன்னனின் மகனான
துரியோதனனே வந்து
கையேந்தும் சிறப்பைப்
பெற்றவரான நீங்கள்
சென்று விட்டீர்களா ! “

“இந்த உலகத்தையே
கட்டி காப்பாற்றும்
அந்த கிருஷ்ணனே
உங்களிடம் கையேந்திய
சிறப்பைப்
பெற்றவரான நீங்கள்
சென்று விட்டீர்களா ! “

“பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் உட்பட
அனைவரும் உங்களிடம்
கையேந்திய சிறப்பைப்
பெற்றவரான நீங்கள்
சென்று விட்டீர்களா! “

“பொருட்களை மட்டுமே
தானமாகக் கொடுக்கக்
கூடிய இந்த
உலகத்தில் உயிரையே
தானமாகக்
கொடுத்தவரான நீங்கள்
சென்று விட்டீர்களா ! “

“பெற்றோரும்
உற்றாரும்
சுற்றத்தாரும்
மனித இனத்தில்
ஒரு இனம் என்று
எங்களை
நினைக்காமல்
ஒதுக்கி விட்ட
திருநங்கை இனத்தில்
ஒருத்தியான
என்னையும்
ஒரு மனிதராக மதித்து
மனைவியாக்கி அன்பு
செலுத்தியவரான நீங்கள்
சென்று விட்டீர்களா ! “

“திருநங்கையை
திருமணம் செய்து
மனைவியாக
ஏற்றுக் கொண்டு
மனிதர்களை
சமமாக மதிக்க
வேண்டும் என்பதை
உலகிற்கு
உணர்த்தியவரான
நீங்கள் சென்று
விட்டீர்களா ! “

“திருநங்கை இனமும்
மனித இனத்தில்
ஒரு இனம் தான்
என்பதை இந்த
உலகத்திற்கு
உணர்த்தியவரான
நீங்கள் சென்று
விட்டீர்களா ! “

“இந்த உலகத்தில்
உள்ள அனைத்து
திருநங்கைகளின்
பெருமையையும்
உயர்த்தும் விதத்தில்
செயலைச் செய்தவரான
நீங்கள் சென்று
விட்டீர்களா ! “

“திருநங்கைகளில்
ஒருத்தியான நான்
தங்களுடைய மனைவி
என்று சொல்லும்
தகுதியை எனக்கு
கொடுத்தவரான நீங்கள்
சென்று விட்டீர்களா! “

“இனி எங்களை
ஆதரித்து அன்பு
செலுத்த யார்
இருக்கிறார்கள் - என்று
வருத்தப்பட
வைத்து விட்டு
எங்களை தனிமையில்
தவிக்க வைத்து விட்டு
சென்று விட்டீர்களே ! “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment