April 26, 2020

பரம்பொருள்-பதிவு-212


               ஜபம்-பதிவு-460
              (பரம்பொருள்-212)

“இந்த சமுதாயத்தால்
தொடர்ந்து
காயப்படுத்தப்பட்டு
வாழ்வதற்கு
வழி இல்லாமல்
அல்லாடிக்
கொண்டிருக்கும்
திருநங்கை இனமே
மகிழ்ச்சி
அடையும் வகையில்
செயலைச் செய்து
விட்டு எங்களை அழ
வைத்து சென்று
விட்டீர்களே ! “

“இந்த உலகத்தால்
அநாதையாக்கப்பட்ட
எங்களை அன்பு
கரம் நீட்டி
ஆதரவாக இருந்தவரே
மீண்டும் எங்களை
இந்த உலகத்தில்
அநாதையாக
இருக்குமாறு
விட்டு விட்டு
சென்று விட்டீர்களே ! “

ஐயோ! சென்று
விட்டீர்களே ! “

“இனி இந்த உலகத்தில்
எங்களுக்கு ஆதரவாக
இருக்கப் போவது யார் ? “

“எங்களுடைய
மன வலியை
புரிந்து கொண்டு
எங்களுக்கு துணையாக
இருக்கப் போவது யார் ? “

“எங்களுக்கு துணையாக
யாருமே இல்லையே
இந்த உலகத்தில்”

“நீங்கள் இல்லாத
இந்த உலகத்தில்
நான் ஏன் இன்னும்
உயிரோடு இருக்கிறேன் “

“என்னுடைய இதயம்
ஏன் இன்னும்
வெடிக்காமல்
இருக்கிறது “

“என்னுடைய இதயம்
வெடித்து நான்
இறந்து விடக்கூடாதா ? “

“ஐயோ !  நான்
என் செய்வேன் என்று
அழுது கொண்டே
அந்த திருநங்கை

தன்னுடைய தலையில்
சூடி இருந்த
பூவை எடுத்து
தரையில் வீசினாள் ;
தன்னுடைய நெற்றியில்
இட்டிருந்த
பொட்டை அழித்தாள் ;
தன்னுடைய கைகளில்
மாட்டி வைத்திருந்த
வளையல்களை
தரையில்
மோதி உடைத்தாள் ;
அவ்வாறு உடைக்கும்
போது கைகளில்
போட்டிருந்த
வளையல் உடைந்து
வழிந்த இரத்தம்
அந்த திருநங்கையின்
கைகளை நனைத்ததோடு
மட்டுமல்லாமல்
அரவானின்
உடலையும் நனைத்தது “

“அரவான்
சிந்திய இரத்தம்
இந்த உலகத்தை
நனைத்து குளிர்வித்தது ;
ஆனால் திருநங்கை
சிந்திய இரத்தம்
அரவானின் உடலை
நனைத்து அரவானுடைய
உடலை குளிர்வித்தது ; “

“அவள் அழுத
குரலைக் கேட்டு
அரவானே உயிர்பெற்று
வந்து விடுவான்
என்று சொல்லத்தக்க
வகையில் அந்த
திருநங்கையின்
அழுகை இருந்தது “

“அழுது கொண்டிருந்த
திருநங்கை தன்னுடைய
அழுகுரலை நிறுத்தினாள்  

“சிறிது நேரம்
அமைதியாக இருந்தாள் “

“சட்டென்று உணர்ச்சி
வந்தவள் போல்
எழுந்து நின்றாள் ;
ஆவேதத்துடன்
ஐயோ ! என்று
கூச்சலிட்டாள் ;
அவள் கத்திய கூச்சல்
அந்த இடத்தையே
அதிர வைத்தது ;
கல்லும் கரைந்து
விடும் என்று
சொல்லத்தக்க
வகையில் அந்த
திருநங்கையின்
ஆவேசமான
அழுகுரல் இருந்தது ;
ஒரு நிமிடம்
நிதானித்த அந்த
திருநங்கை
தன்னுடைய கழுத்தில்
இருந்த தாலியை
தானே அறுத்து
கீழே போட்டாள் ;
அந்த கணத்தில்
அந்த திருநங்கை 
ஓ என்று கதறி
அரவான் மேல்
மயங்கி விழுந்தாள் “

“அழுகுரலால் நிரம்பி
இருந்த அந்த இடமே
மயான அமைதியாக
மாறி விட்டது”

“சிறிது நேரத்தில்
அந்த திருநங்கைக்கு
உணர்வுகள்
திரும்பிய போது
அந்த திருநங்கையின்
காதுகளில் யாரோ
நடந்து வரும்
காலடி ஓசை கேட்டது “

“தன்னுடைய
தலையைத் தூக்கி
யார் வருகிறார்கள்
என்று பார்த்தாள்
அந்தத் திருநங்கை “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 26-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment