October 11, 2020

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-3

 

பதிவு-3

 

“கார் வைத்திருக்கும்

என்னுடைய நண்பருக்கு

போன் செய்தேன்

விஷயத்தை சொன்னேன்

வீட்டிற்கு செல்லுங்கள்

அப்பாவைக்

காரில் ஏற்றுங்கள்

அதற்குள் நான் வந்து

விடுகிறேன்” என்றேன்.

 

அவர் சொன்னார்

“நீங்கள் நேரடியாக

HOSPITAL வந்து

விடுங்கள்” என்றார்

 

இல்லை நான் FILES

BILLS எடுக்க வேண்டும்

என்னுடைய அம்மாவிற்கு

தெரியாது எப்படியும்

அப்பாவை ADMISSION

போடுவார்கள்

அதற்கு தயாராக

நான் வர வேண்டும்

அதனால் நீங்கள் போய்

என்னுடைய அப்பாவை

வண்டியில் ஏற்றி

விட்டு எனக்கு

போன் செய்யுங்கள்”

என்றேன்

 

“நான் எங்கிருக்கிறேன்

என்று சொல்கிறேன்

கிட்டே வந்து

விட்டால் ஒன்றாக

செல்லலாம்

இல்லை என்றால்

நான் சொல்கிறேன்

நீங்கள் கிளம்பி

விடுங்கள் - நான்

HOSPITAL வந்து

விடுகிறேன்” என்றேன்

 

கார் டிரைவர்

“சரி சார்”

என்றார்.

 

நான் என்னுடைய

நண்பன் கார்த்திக்கிடம்

திரும்பினேன்

விஷயத்தைச்

சொன்னேன்

கொஞ்சம் SPEED ஆக

போக வேண்டும்

என்றேன்

BIKE ஓட்டுவதில்

நான் எவ்வளவு

பெரிய ஆள் SPEED

ஆக ஓட்டுவதைப்

பார் என்று

வேகத்துடன் ஓட்டினான்

கவனத்துடன்

தான் ஓட்டினான்

 

கார்த்திக் எவ்வளவு

வேகமாக ஓட்டினாலும்

தவறு நேராத வகையில்

தான் ஓட்டுவான்

அன்றும் அவ்வாறே

தான் ஓட்டினான்

 

வண்டி வேகமாக

சாலைகளைக்

கடந்து சென்று

கொண்டிருந்தது

எதிர்பாராதவிதமாக

ஏற்பட்ட விபத்தால்

நாங்கள் இருவரும்

லாரியின் அடியில்

சக்கரத்துக்கு அடியில்

கிடந்தோம்

 

அங்குள்ள மக்கள்

அனைவரும் எங்கள்

இருவரையும்

லாரியின் கீழிருந்து

எங்களை இழுத்து

வண்டியை

வெளியே எடுத்தனர்

 

எனக்கு கொஞ்சம்

நினைவு இல்லை

எதிரே மங்கலாகத்

தான் தெரிந்தது

என்னுடைய கண்ணாடி

உடைந்து விட்டது

தரையில் என்னுடைய

பர்ஸ் பணத்துடன்

கிடந்தது

அதனை எடுக்க

என்னால் முடியவில்லை

நான் எடுத்துக் கொண்டு

வந்த FILE அனைத்தும்

சிதறிக் கிடந்தது

கை கால்

தேய்ந்திருந்தது

காலில் இருந்து

இரத்தம் கொட்டியது

என்னுடைய கர்சீப்பை

வைத்து துடைத்தேன்

 

என் அருகில்

இருக்கும் என்னுடைய

நண்பன் கார்த்திக்கும்

அதே நிலை தான்

ஒருவர் தண்ணீர்

கொண்டு வந்து

கொடுத்தார்

நான் குடித்தேன்

 

நான் தண்ணீர்

குடித்த போது

தான் எனக்கு

கொஞ்சம் மயக்கம்

தெளிந்தது

எதிரே இருப்பவர்கள்

எனக்கு கொஞ்சம்

கொஞ்சமாக

தெரிய ஆரம்பித்தார்கள்

 

ஒருவர் என்னுடைய

பணம் நிரம்பி

இருந்த என்னுடைய

பர்ஸை கொண்டு வந்து

என்னிடம் கொடுத்தார்

தம்பி நிறைய பணம்

பர்ஸில் இருக்கிறது

சரியாக இருக்கிறதா

என்று பார்த்துக்

கொள் என்றார்

 

ஒருவர் சொன்னார்

“யார் செய்த

புண்ணியமோ

நீங்கள் இரண்டு

பேரும் உயிரோடு

இருக்கிறீர்கள்

ஏற்பட்ட விபத்திற்கு

செத்திருப்பீர்கள்”

என்றார்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment