October 11, 2020

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-5

 

பதிவு-5

 

உடனடியாக

DIALYSIS நடக்கும்

அறைக்கு கூட்டிச்

சென்றார்கள்

ஒரு NURSE வந்து

ADMISSION

போட்டு விட்டு

DIALYSIS

அறைக்கு வாருங்கள்

என்றார்

 

நானும் என்னுடைய

நண்பனும் ADMISSION

போட்டு விட்டு

DIALYSIS

அறைக்கு வந்தோம்

அங்கே

அப்பாவிற்கு

DIALYSIS நடந்து

கொண்டிருந்தது

 

DIALYSIS

IN CHARGE

AND MANAGER

என்னைக் கூப்பிட்டார்

நான் சென்றேன்

 

அந்த அறையில்

வைத்து அவர்

பேசத் தொடங்கினார்

 

INCHARGE

“ஏற்கனவே உனக்கு

நாங்கள் பலமுறை

சொல்லி விட்டோம்

DIALYSIS

பண்ணுவதற்கு நாங்கள்

என்றைக்கு வர

வேண்டும் என்று

சொல்கிறோமோ

அப்போது வர வேண்டும்

அவ்வாறு வராமல்

உன் விருப்பபடி

வருவதற்கு

இது என்ன

CINEMA THEATRE ஆ

 

நீ படித்தவன்

தானே இது

மாதிரி செய்யலாமா

 

இப்போது என்ன

நடந்திருக்கிறது

உன்னுடைய

அப்பாவிற்கு

நினைவு எப்போது

திரும்பும் என்று

சொல்ல முடியாது

இக்கட்டான

சூழ்நிலையில்

கொண்டு வந்து

நிறுத்தியிருக்கிறாய்

என்று திட்டியபடியே

அந்த அறையில் அவர்

போட்ட சத்தம்

அந்த அறையில்

உள்ளவர்கள் மட்டுமின்றி

வெளியே நின்று

கொண்டிருந்தவர்களுக்கும்

கேட்டது

 

நான் எதுவும்

சொல்லாமல்

அமைதியாக

அவர் திட்டுவதை

கேட்டுக் கொண்டிருந்து

விட்டு அவர் திட்டி

முடித்தபின் அந்த

அறையை விட்டு

வெளியே வந்தேன்

 

ஒரு நர்ஸ் என்னை

தேடி வந்தார்

“சார் உங்களை

CHIEF DOCTOR

கூப்பிடுகிறார்”

என்றார்

 

 “நீ போய் விட்டு

வா நான் இங்கே

அம்மாவையும்

அப்பாவையும்

பார்த்துக்

கொள்கிறேன்”

என்று என்னுடைய

நண்பன் சொன்னான்

 

“டேய்

உள்ளே போய்

நான் மட்டும் தானே

திட்டு வாங்கினேன்

டாக்டரிடமும் நான்

மட்டும் தான்

திட்டு வாங்க

வேண்டுமா?

தனியாக என்னால்

திட்டு வாங்க

முடியாது

நீயும் வா”

என்றேன்.

 

“சரிவா”

என்று\ என்னுடைய

நண்பனும் என்னுடன்

கிளம்பி விட்டான்

 

CHIEF DOCTOR

முன்னால் நானும்

என்னுடைய நண்பனும்

அமைதியாக நின்று

கொண்டிருந்தோம்

 

CHIEF DOCTOR

“பாலா ஏன்

இவ்வாறு செய்கிறாய்

நாங்கள் சொல்வதை

எதுவும் செய்யக்

கூடாது என்று

முடிவில் இருக்கிறாயா

நாங்கள் சொல்வதை

ஏன் செய்ய

மாட்டேன் என்கிறாய்

உன் மனதுக்கு

என்ன தோன்றுகிறதோ

அதைத் தான்

செய்கிறாய்

இதே தவறை

பலமுறை

செய்திருக்கிறாய்

நீ செய்த தவறான

செய்கையினால்

இப்போது உன்னுடைய

அப்பா என்ன

நிலையில் இருக்கிறார்

என்று பார்த்தாயா

 

உன்னுடைய அப்பாவிற்கு

நினைவு எப்போது வரும்

என்று சொல்ல முடியாது

என்ற நிலை தான்

இப்போது இருக்கிறது

 

இந்த நிலைக்கு

யார் காரணம்

நீ தானே காரணம்

 

நான் பலமுறை

உன்னிடம் WARNED

பண்ணி இருக்கேன்

இது மாதிரி

செய்யாதே என்று

ஏன் நாங்கள்

சொன்னால்

அந்த தேதியில்

வரமாட்டாயா

 

என்ன நினைத்துக்

கொண்டிருக்கிறாய்

ஒவ்வொரு முறையும்

கூட்டிக் கொண்டு

வராததற்கு ஏதாவது

காரணம் சொல்கிறாய்

 

ஒவ்வொரு நாள்

ஒரு காரணம்

சொல்கிறாய்

இன்று என்ன

காரணம்

வைத்திருக்கிறாய்

என்ன சொல்லப்

போகிறாய் என்று

எனக்குத் தெரியாது

அதை கேட்கவும்

நான் விரும்பவில்லை

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment