October 11, 2020

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-6

 

பதிவு-6

 

அப்பாவை நன்றாக

பார்த்துக் கொள்ள

வேண்டும் என்ற

எண்ணம் உனக்கு

இல்லையா

உன்னுடைய அப்பாவை

இப்படியா

பார்த்துக் கொள்வது

இது தான் உன்னுடைய

அப்பாவை நீ

பார்க்கும் முறையா

 

உடல்நிலை

சரியில்லாமல்

இருப்பவர்களை

எப்படி பார்க்க

வேண்டும் என்பது

உனக்குத் தெரியாதா

 

உன்னுடைய

அப்பாவை எப்படி

பார்த்துக் கொள்ள

வேண்டும் என்பதைப்

பற்றி நாங்கள் உனக்கு

சொல்லிக் கொடுத்து

இருக்கிறோம் அல்லவா

 

நாங்கள் குறிப்பிட்ட

தேதியில் வரச்சொல்லி

அந்த தேதியில்

வரவில்லை என்றால்

உன்னுடைய அப்பாவிற்கு

உடல்நிலைக்கு

ஆபத்து என்று பலமுறை

உனக்கு சொல்லி

இருக்கிறோம் அல்லவா

 

ஒரு நாளும் நாங்கள்

சொல்வதை நீ

சிந்தித்துப் பார்ப்பதில்லை

செய்த தவறையே

திரும்ப திரும்ப

செய்கிறாய்

 

நான் என்ன சொல்வது

என்றே தெரியவில்லை

 

மீண்டும் இது மாதிரி

நீ செய்தால்

நான் எங்களுடைய

HOSPITAL –ல்

சேர்த்துக் கொள்ள

மாட்டேன்

 

என்று தொடர்ந்து

சில மணித்துளிகள்

திட்டிக் கொண்டிருந்து

விட்டு சரி போங்கள்

மீண்டும் இது மாதிரி

செய்தால்…….-?”

என்று நிறுத்தி விட்டு

நீங்கள் போகலாம்

என்றார்.

 

நானும் என்னுடைய

நண்பனும் அமைதியாக

இருந்து விட்டு

அந்த அறையை விட்டு

வெளியே வந்தோம்

 

நண்பன் என்னிடம்

கேட்டான் நாம் தான்

காசு தருகிறோம்

அப்புறம் ஏன் டாக்டர்

நம்மை திட்டுகிறார்

TREATMENT

செய்ய சொன்னால்

செய்ய வேண்டியது

தானே நம்மை

திட்டுவதற்கு அவருக்கு

யார் அதிகாரம்

கொடுத்தது என்றான்

 

“ஒருவர் கோபப்படுகிறார்

என்றால்

அவர் கோபப்படுகிறார்

என்று சொல்லக்கூடாது

கோபப்படுபவர்

நிலையில்

இருந்து பார்க்க

வேண்டும்

அவ்வாறு

பார்த்தால் மட்டுமே

அவர் எதற்காக

கோபப்படுகிறார்

என்பது தெரியும்

அப்பாவை

ஆரம்பத்தில் இருந்து

பார்ப்பவர் அவர் தான்

அப்பாவின்

உடல்நிலையைப் பற்றி

நன்றாக அறிந்தவர்

அவர் கோபப்படுவதில்

காரணம் இருக்கிறது

நான் கோபப்பட்டால்

தான் தப்பு”

என்றேன்

 

DIALYSIS முடிந்து

அப்பாவை ROOM ‘க்கு

கொண்டு சென்று

விட்டார்கள் நானும்

என்னுடைய நண்பனும்

அந்த அறைக்குள்

சென்றோம்

 

அந்த அறைக்குள்

அப்பா மயக்க நிலையில்

படுத்துக் கொண்டிருந்தார்

அம்மா அருகில்

அமர்ந்து கொண்டிருந்தார்

 

கார்த்தி நேரம் 

ஆகி விட்டது

கிளம்பு என்றேன்

அவனும் சரி பாலா

ஏதாவது உதவி

தேவைப்பட்டால்

உடனே எனக்கு

போன் பண்ணு - நான்

வந்து விடுகிறேன்

என்று சொல்லி

விட்டு சென்று

விட்டான்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment