October 11, 2020

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-4

 

பதிவு-4

 

நீங்கள் இருவரும்

REST எடுத்து விட்டு

செல்லுங்கள் என்றார்கள்

சிறிது நேரம் கழித்து

எனக்கு மயக்கம்

தெளிந்து நான்

NORMAL நிலைக்கு

வந்து விட்டேன்

என்னுடைய நண்பன்

கார்த்திக்கிற்கும்

நினைவு வந்து விட்டது

ஆனால் தரையில்

என்னுடைய கையும்

காலும் தேய்ந்ததால்

ஏற்பட்ட காயங்களால்

வலி உயிரை எடுத்தது

 

என்னுடைய நண்பனுக்கும்

உடல் முழுவதும்

காயங்கள்

அவனும் அவ்வாறே

வேதனைப் பட்டுக்

கொண்டிருந்தான்

 

வண்டிக்கு ஒரு சில

சேதங்களைத் தவிர

பெரிய வகையில்

சேதம் எதுவும் இல்லை

 

நான் கார்த்திக்கிடம்

கேட்டேன்

டேய் இப்போது

தான் உனக்கு கல்யாணம்

ஆகியிருக்கு இப்படி

பண்ணி விட்டாய்

உனக்கு ஏதாவது

ஆகி இருந்தால்

நான் என்ன

பண்ணுவேன்

எனக்கு உதவி பண்ண

வந்து உனக்கு இப்படி

ஆகி விட்டது என்றேன்

 

அந்த நேரத்திலும்

என்னுடைய நண்பன்

சொன்னான்

“என்னுடைய

பொண்டாட்டிக்கு

தாலி STRONG ஆக

கட்டியிருக்கேன்

அது அவ்வளவு

சீக்கிரத்தில்

அறுந்து விடாது

நான் அவ்வளவு

எளிதில்

சாக மாட்டேன்

 

அது மட்டுமல்ல

பாலா நாம்

போவது நல்ல

விஷயத்திற்கு

போகிறோம்

நாம் நல்ல விஷயம்

செய்ய போகிறோம்

நம்மை கடவுள்

சாக விட மாட்டார்

ஏன் நம்மை கடவுள்

தான் நம்முடைய

உயிரை காப்பாற்றினார்

என்று நினைத்துக்

கொள்ளேன்”

என்றான்

 

சரி ஜோக் அடிக்காதே

நாம் வண்டியை ஓரமாக

விட்டு விட்டு

ஆட்டோவில்

சென்று விடுவோம்

சரியா என்றேன்

 

வேண்டாம்

நாம் வண்டியில்

செல்வோம்

என்னால் வண்டியை

ஓட்ட முடியும்

என்று சொன்ன

காரணத்தினால்

நானும் என்னுடைய

நண்பன் கார்த்திக்கும்

BESANT NAGAR -ல்

இருந்து PERAMBUR

வந்தோம்

நாங்கள் தங்கி இருந்த

QUARTERS வந்தோம்

கீழே கார் நின்று

கொண்டிருந்தது

இப்போது தான்

சார் வந்தேன் என்றார்

கார் டிரைவர்

 

AD-22 நாங்கள்

தங்கி இருந்த

வீட்டிற்குள் நுழைந்தோம்

படுக்கையறையில்

படுத்துக் கொண்டிருந்த

என்னுடைய அப்பாவை

பார்த்தபடியே என்னுடைய

அம்மா அழுது

கொண்டிருந்தார்

 

நான் உள்ளே

நுழைந்ததும்

என்னுடைய அம்மா

என்னைக் கட்டிப்

பிடித்துக் கொண்டு

ஓ வென அழுத்

தொடங்கி விட்டார்

அப்பாவைப் பாருடா

அப்பாவைப் பாருடா

என்றார்

என்னுடைய அருகில்

என்னுடைய நண்பன்

நின்று கொண்டிருந்தான்

 

நான் சென்று

அப்பாவைப் பார்த்தேன்

உயிர் இருந்தது

அப்பா நன்றாகத் தான்

இருக்கிறார்

மயக்கத்தில் இருக்கிறார்

உடனே HOSPITAL

போவோம் என்று

கிளம்பினோம்

 

அப்பாவை நானும்

என்னுடைய நண்பர்

கார் டிரைவர் ஆகிய

அனைவரும்

தூக்கிக் கொண்டு

காரில் உட்கார

வைத்து விட்டு

HOSPITAL

நோக்கி சென்று

கொண்டிருந்தோம்

 

வண்டி HOSPITAL

வாசலில் போய்

நின்றது

EMERGENCY என்ற

காரணத்தினால்

ஸ்ட்ரெச்சர்

கொண்டு வந்து

அவரை படுக்க

வைத்து கூப்பிட்டு

போனார்கள்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment