October 11, 2020

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-7

 

பதிவு-7

 

நான் அமர்ந்து

கொண்டிருந்தேன்

சிறிது நேரம் சென்று

கொண்டிருந்தது

அப்பா முணக

ஆரம்பித்தார்

நான் அருகில் சென்றேன்

சிறிது சிறிதாக

கண்களைத்

திறந்தார் அப்பா

பொறுமையாக

பேசத் தொடங்கினார்

 

“பிறந்த நாள் அன்று

HOSPITAL

வந்து விட்டோம்

என்று கவலைப்

படுகிறாயா?”

என்று என்னைப்

பார்த்து கேட்டார்

 

“இல்லை” என்றேன்

 

என் அப்பா கண்களை

மூடி உறங்கி விட்டார்

நான் எழுந்து

கிளம்ப முயன்றேன்

 

என்னுடைய அம்மா

“NIGHT ல எங்கே

போகிறாய்” என்றார்

 

“DOCTOR கூப்பிட்டார்

நான் அவரைப்

பார்க்க வேண்டும்”

என்று பொய்

சொல்லி விட்டு

கிளம்பி விட்டேன்

 

அந்த அறையை

விட்டு வெளியே

வந்தேன்

அந்த HOSPITAL ல்

இரவு நேரத்தில்

இறந்த உடல்களை

வெளியே அனுப்பி

வைப்பார்கள்

 

இறந்த உடலை

ஸ்ட்ரெச்சரில் வைத்து

தள்ளிக் கொண்டு

போகும் போது

நாலைந்து பேர்கள்

அந்த உடலைச்

சுற்றி அழுத வண்ணம்

சென்று கொண்டு

இருந்தார்கள்

 

வாழ்க்கை என்பது

இவ்வளவு தான்

என்று நினைத்துக்

கொண்டே நடந்து

சென்று கொண்டிருந்த

போது தான்

என்னுடைய

கையும் காலும் வலித்தது

விபத்து நடந்து

முடிந்த பிறகு

நான் என்னுடைய

காயத்திற்கு

மருந்து போடவில்லை

என்பது அப்போது

தான் தெரிந்தது

 

நான் மருந்து

போட்டுக் கொண்டு

அந்த HOSPITAL

எதிரே வெளியே

வந்து அமர்ந்தேன்

 

வானத்தில் இருந்த

நிலாவைப் பார்த்தபடி

அமர்ந்து கொண்டு

இருந்தேன்

 

என்னுடைய

அப்பா சொன்னது

என்னுடைய

ஞாபகத்திற்கு

வந்தது

 

“பிறந்த நாள்

கோயிலுக்குப்

போக வேண்டும்”

 

“HOSPITAL

போகக்கூடாது”

 

“யாரிடமும்

திட்டு வாங்கக்கூடாது”

 

என்னை அறியாமல்

என் கண்களிலிருந்து

கண்ணீர் வழிந்தது

அதை

துடைக்காமலேயே

நான் அந்த

நிலாவையே பார்த்துக்

கொண்டு இருந்தேன்

 

என்னுடைய மனதை

விட்டு நீங்காத

நினைவுகளில்

இதுவும் ஒன்று

 

எனக்கு அலுவலகத்தில்

ஏற்பட்ட பிரச்சினை

மன வருத்தம்

ஆகியவற்றின்

காரணமாக

10102020 அன்று

நான் பிறந்த நாள்

கொண்டாடவில்லை

யாரையும் வீட்டிற்கு

வர வேண்டாம் என்று

சொல்லி விட்டேன்

 

ஆனால் என்னுடைய

நண்பன் கார்த்திக்

பல வருடங்கள்

கழித்து என்னுடைய

பிறந்தநாளுக்கு

என்னைத் தேடி வந்தான்

அவனுடன் வெளியே

சென்ற நான்

10102020-ம் தேதி

சனிக்கிழமை

என்னுடைய

பிறந்தநாள் அன்று

எடுத்துக் கொண்ட

புகைப்படங்கள்

தான் இவைகள்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////



















No comments:

Post a Comment