September 10, 2020

திருக்குறள்- உறங்குவது-பதிவு-3

 

திருக்குறள்-

உறங்குவது-பதிவு-3

  

(I) நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலை

நாமே பிரித்து

வெளியே

செயல்பட வைப்பது

 

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலுக்குள்

இருக்கும்

நம்முடைய

சூட்சும உடலைப்

பிரித்து பல்வேறு

வேலைகளைச் செய்ய

வைக்க முடியும்

என்றாலும்

உண்மையை

உணர்ந்தவர்கள்

தங்களுடைய

ஸ்தூல உடலிலிருந்து

தங்களுடைய

சூட்சும உடலை

பிரித்து பல்வேறு

வேலைகளைச்

செய்தாலும்

அதில் இரண்டு

செயல்கள் மட்டுமே

முக்கியத்துவம்

பெறுகின்றன

 

(a) சூக்குமப் பயணம்

(b) கூடு விட்டு

கூடு பாய்தல்

 

இந்த இரண்டு

செயல்களையும்

விழிப்புணர்வு பெற்ற

நிலையில் தான்

செய்ய முடியும்

 

(a) சூக்குமப் பயணம்

சூக்குமப் பயணம்

என்பது தவத்தில்

உயர்ந்த நிலை

அடைந்தவர்களால்

மட்டுமே

செய்யக்கூடிய ஒரு

பயிற்சி முறையாக

இருந்து வருகிறது

 

சூக்குமப் பயணம்

உயர்ந்த நிலை

அடைந்தவர்களால்

மட்டுமே

செய்யக்கூடிய

ஒரு பயிற்சி

முறையாக

இருக்கின்ற

காரணத்தினால்

இன்றைய உலகில்

சூக்குமப் பயணம்

விரல் விட்டு

எண்ணக் கூடிய

மனிதர்களால் மட்டுமே

செய்யப்பட்டு வருகிறது

 

சூக்குமப் பயணத்தின்

முறைகள் சரியாக

தெரியாத

காரணத்தினாலும்

அதைச் செய்பவர்கள்

மற்றவர்களுக்கு

சொல்லிக் கொடுக்காத

காரணத்தினாலும்

சூக்குமப் பயணம்

இன்று கொஞ்சம்

கொஞ்சமாக

மறைந்து கொண்டு

வருகிறது

அழிந்து கொண்டு

வருகிறது

 

சரியாகச்

சொல்ல வேண்டும்

என்றால்

சூக்குமப் பயணம்

அழிவதற்கு

முக்கிய காரணம்

சூக்குமப் பயணத்தின்

மதிப்புகள்

மகிமைகள்

மனிதர்கள்

உணர்ந்து

கொள்ளாததும் புரிந்து

கொள்ளாததும்

தான் முக்கியக்

காரணம்

 

சூக்குமப் பயணம்

என்பது

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலைப்

பிரித்து இந்த

பிரபஞ்சம்

முழுவதும்

சுற்றித் திரிந்து

பார்க்க விரும்பும்

இடங்களைப்

பார்ப்பது

எந்த நபரைப்

பார்க்க வேண்டும்

என்று நாம்

விரும்புகிறோமோ

அந்த நபரைப்

பார்ப்பது

எந்த நபரிடம்

நாம் பேச

வேண்டும் என்று

நினைக்கிறோமோ

அந்த நபரிடம்

பேசுவது

எந்த நபரிடம்

நம்முடைய

எண்ணங்களில்

எத்தகைய

எண்ணங்களை

அந்த நபரிடைம்

சொல்ல

நினைக்கிறோமோ

அத்தகைய

எண்ணங்களை

அவருக்கு

சொல்வது

நம்முடைய

எண்ணங்களை

அந்த நபரை

உணரும்படிச்

செய்வது

நம்முடைய

எண்ணங்களை

அந்த நபரைச்

செயல்படுத்தும்

படிச் செய்வது

போன்ற

செயல்களைச்

செய்து விட்டு

சூட்சும உடலானது

மீண்டும்

தன்னுடைய

ஸ்தூல உடலுக்குள்

சென்று சேர்ந்து

கொள்வதற்குப்

பெயர் தான்

சூக்குமப் பயணம்

ஆகும்

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment