September 10, 2020

திருக்குறள்- உறங்குவது-பதிவு-6

 திருக்குறள்-

உறங்குவது-பதிவு-6

 

ஒருவர் முதலாவது

ஸ்தூல உடலிலிருந்து

தன்னுடைய

சூட்சும உடலைப்

பிரித்து

இரண்டாவது

இறந்த

ஸ்தூல உடலுக்குள்

சென்றாலும்

சூட்சும உடலானது

முதல்

ஸ்தூல உடலுடன்

இணைந்த நிலையில்

தான் இருக்கும்

 

சூட்சும உடலானது

முதல்

ஸ்தூல உடலுடன்

தொடர்பு கொண்ட

நிலையில்

தான் இருக்கும்

 

இரண்டாவது இறந்த

ஸ்தூல உடலுக்குள்

பிரவேசம் செய்யும்

சூட்சும உடலானது

தனது கடமையை

முடித்து விட்டால்

மீண்டும் முதல்

ஸ்தூல உடலுக்குள்

சென்று சேரும்

 

முதல் ஸ்தூல

உடலிலிருந்து பிரிந்து

இரண்டாவது

ஸ்தூல உடலுக்குள்

செல்லும்

சூட்சும உடலானது 

இரண்டாவது

ஸ்தூல உடலுக்குள்

தங்கி தன்னுடைய

கடமையை

முடிக்கும் வரை

முதல்

ஸ்தூல உடலைப்

பத்திரப் படுத்தி

வைக்க வேண்டும்

 

முதல்

ஸ்தூல உடலுக்கு

எந்தவிதமான பாதிப்பும்

ஏற்படாதவாறு பார்த்துக்

கொள்ள வேண்டும்

 

முதல்

ஸ்தூல உடலானது

எரிக்கப் பட்டாலோ

அல்லது

முதல்

ஸ்தூல உடலுக்கும்

முதல்

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

சூட்சும உடலுக்கும்

உள்ள தொடர்பானது

துண்டிக்கப்பட்டாலோ

முதல்

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து

இரண்டாவது

ஸ்தூல உடலுக்குள்

புகுந்து செயல்பட்டுக்

கொண்டிருக்கும்

சூட்சும உடலானது

மீண்டும் முதல்

ஸ்தூல உடலுக்குள்

புகவே முடியாது.

 

எனவே முதல்

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து

வெளியே சென்ற

சூட்சும உடலானது

இரண்டாவது

ஸ்தூல உடலுக்குள்

புகுந்து வாசம்

செய்து மீண்டும்

முதல்

ஸ்தூல் உடலுக்குள்

சென்று வாசம்

செய்யும் வரை

முதல்

ஸ்தூல உடலானது

பாதுகாப்பாக வைக்கப்பட

வேண்டியது மிகவும்

அவசியம் ஆகும்

அவ்வாறு

செய்யாமல்

ஸ்தூல உடலை

பாதுகாப்பாக

வைக்காமல்

விட்டு விட்டா,ல்

மரணம் என்பது

ஏற்படும் என்பதை

நினைவில்

கொள்ள வேண்டும்

 

இவ்வாறு தான்

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து செல்லும்

சூட்சும உடலானது

இரண்டு முக்கியமான

செயல்களான

சூக்குமப் பயணம்

மற்றும்

கூடு விட்டு

கூடு பாய்தல் என்ற

இரண்டு

முக்கியமானச்

செயல்களைச்

செய்கிறது

 

சூக்குமப் பயணம்

மற்றும்

கூடு விட்டு

கூடு பாய்தல்

ஆகிய இரண்டு

செயல்களுக்கும்

உள்ள பொதுவான

பண்பு என்று

எதைக் குறிப்பிடலாம்

என்றால்

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலானது

பிரிந்து வெளியே

சென்று தன்னுடைய

கடமையை

முடித்து வீட்டு

மீண்டும்

தன்னுடைய

ஸ்தூல உடலுக்குள்

செல்வது என்பதையும்

இந்த இரண்டு

செயல்களையும்

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

தான் செய்கிறோம்  

என்பதையும் தான்

குறிப்பிட முடியும்

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment