February 19, 2023

ஜபம்-பதிவு-921- மரணமற்ற அஸ்வத்தாமன்-53 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-921-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-53

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

(வகுப்பு முடிந்து

சென்ற

அஸ்வத்தாமனை

அழைத்து

துரியோதனன்

பேசுகிறான்)

 

துரியோதனன் :

அஸ்வத்தாமா

நில் உன்னிடம்

கொஞ்சம் பேச

வேண்டும்

 

அஸ்வத்தாமன் :

என்னிடம்

பேசுவதற்கு

என்ன

இருக்கிறது

 

துரியோதனன் :

நண்பனிடம்

பேசுவதற்கு

எவ்வளவோ

விஷயங்கள்

இருக்கும்

 

அஸ்வத்தாமன் :

எனக்கு

நண்பர்கள் என்று

யாரும்

கிடையாது

 

துரியோதனன் :

என்னை

நண்பனாக

ஏற்றுக் கொள்

 

அஸ்வத்தாமன் :

யாரையும்

நண்பனாக

ஏற்றுக் கொள்ளும்

மனநிலையில்

நான் இல்லை

 

துரியோதனன் :

எதற்காக

 

அஸ்வத்தாமன் :

நண்பர்களால்

அவமானப்

படுத்தப்பட்டதால்

 

துரியோதனன் :

என்ன காரணம்

 

அஸ்வத்தாமன் :

நான் ஏழை

என்ற

காரணம் தான்

 

துரியோதனன் :

ஏழையை

பணக்காரர்கள்

அவமானப்படுத்துவது

என்பது

காலம் காலமாக

இந்த உலகத்தில்

நடந்து வரும்

நடைமுறைதானே

 

இது ஒன்றும்

புதியது

இல்லையே

இதில்

வருத்தப்படுவதற்கு

என்ன இருக்கிறது

 

அஸ்வத்தாமன் :

அவமானப்படுத்தியது

நண்பர்கள்

அல்லவா

நான்

நண்பர்களாக

ஏற்றுக்

கொண்டவர்கள்

அல்லவா

அதனால் தான்

வருத்தப்படுகிறேன்

எனக்கு நேர்ந்த

அவமானத்தைத்

துடைக்கப் போராடிக்

கொண்டிருக்கிறேன்

 

போராட்டமே

வாழ்க்கை

அல்லவா

 

வாழ்க்கையே

ஒரு போர்க்களம்

அல்லவா

 

போராடித்தான்

பார்க்க

வேண்டும்

அல்லவா

 

துரியோதனன் :

வாழ்க்கை

என்பது

போர்க்களம்

கிடையாது

 

எப்போதும்

போராடிக்

கொண்டு

இருப்பதற்கு

 

வாழ்க்கையில்

நடக்கும்

ஒவ்வொரு

விஷயத்திற்கும்

நாம்

போராடிக்

கொண்டு

இருந்தால்

சாகும் வரை

போராடிக்

கொண்டு

தான் இருக்க

வேண்டும்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment