February 19, 2023

ஜபம்-பதிவு-923- மரணமற்ற அஸ்வத்தாமன்-55 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-923-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-55

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

என்னுடைய

நண்பர்கள்

அரைத்த

அரிசி மாவை

தண்ணீரில் கலந்து

எனக்கு

கொடுத்தார்கள்

அதை பால்

என்று நினைத்து

நான் குடித்ததைப்

பார்த்து ஏளனமாகச்

சிரித்து என்னைச்

சுற்றி நின்று

கொண்டு கைதட்டி

ஆரவாரம் செய்து

என்னை அவமானப்

படுத்தினார்கள்

 

நண்பர்களை

உண்மையானவர்கள்

என்று நினைத்தேன்

நண்பர்களுக்குள்

ஏமாற்ற மாட்டார்கள்

என்று நினைத்தேன்

அவமானப்படுத்த

மாட்டார்கள்

என்று நினைத்தேன்

அசிங்கப்படுத்த

மாட்டார்கள்

என்று நினைத்தேன்

ஏளனப்படுத்த

மாட்டார்கள்

என்று நினைத்தேன்

 

என்னை ஏமாற்றி

விட்டார்கள்

நட்பின்

புனிதத்தன்மையைக்

கெடுத்து விட்டார்கள்

நண்பர்களின்

மேல் நான்

வைத்த நம்பிக்கையை

சிதைத்து விட்டார்கள்

நட்புக்கு துரோகம்

செய்து விட்டார்கள்

அவர்கள் எனக்கு

கெடுதல் செய்து

விட்டார்கள்

என்னுடைய

ஏழ்மையை

இகழ்ந்து

விட்டார்கள்

என்னை

அவமானப்படுத்தி

விட்டார்கள்

 

நண்பர்களுக்குள்

உயர்வு தாழ்வு

இருக்கக்கூடாது

பணக்காரன்

ஏழை என்ற

பாகுபாடு

இருக்கக் கூடாது

உயர்ந்தவன்

தாழ்ந்தவன்

என்ற

சாதி வேறுபாடு

இருக்கக் கூடாது

அதை எல்லாம்

அவர்கள்

பார்த்தார்கள்

நான்

பார்க்கவில்லை

நான் நட்பை

மட்டுமே

பார்த்தேன்

வேறு

எதையும்

நான்

பார்க்கவில்லை

 

யாரை எல்லாம்

நான் நண்பன்

என்று பார்த்தேனோ

அவர்கள் எல்லாம்

என்னை நண்பனாக

பார்க்கவில்லை

என்னை

ஏழையாகப்

பார்த்தார்கள்

ஏமாளியாகப்

பார்த்தார்கள்

அறிவில்லாதவன்

என்று பார்த்தார்கள்

ஒன்றும் அறியாதவன்

என்று பார்த்தார்கள்

என்னை

அவமானப்படுத்தி

பார்த்தார்கள்

 

துரியோதனன் :

அவமானங்களை

நமக்கு

ஏற்படுத்தியவர்களையும்

அவமானங்களை

நமக்கு எதற்காக

ஏற்படுத்தினார்கள்

என்பதையும்

நாம் எப்போதும்

மறக்கவே கூடாது

 

ஒவ்வொரு கணமும்

அந்த

அவமானத்தை

நினைத்துக் கொண்டே

இருக்க வேண்டும்

அப்போது தான்

நம்மால்

வாழ்க்கையில்

உயர முடியும்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment