February 19, 2023

ஜபம்-பதிவு-926- மரணமற்ற அஸ்வத்தாமன்-58 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-926-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-58

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

ஏழை என்று

உன்னை

அவமானப்படுத்தியவர்கள்

முன்பாக

செல்வத்தில் திளைக்கும்

செல்வந்தனாக

வாழ்ந்து காட்டு

அவர்களை விட

வாழ்க்கையில்

உயர்ந்து காட்டு

அவர்களால்

தொடக்கூட முடியாத

உயரத்தை

அடைந்து காட்டு

உன்னை விட

திறமைசாலி யாரும்

இல்லை என்று

அவர்கள் வாயால்

சொல்ல

வைத்துக் காட்டு

ஏழ்மை என்பது

அவமானம் அல்ல

என்பதை

உன்னுடைய

உயர்வின் மூலம்

நிரூபித்துக் காட்டு

 

நான் உனக்கு

துணையாக நிற்பேன்

இந்தத் துரியோதனன்

உனக்கு

துணையாக இருப்பான்

 

என்னுடன் நண்பர்களாக

இருப்பவர்களுக்காக

எதையும் செய்வான்

இந்தத் துரியோதனன்

என்பதை

நினைவில் கொள்

 

அஸ்வத்தாமன் :

உன்னுடைய பேச்சும்

சிந்தனையும்

வித்தியாசமாக இருக்கிறது

 

துரியோதனன் :

நான்

வித்தியாசமானவன் தான்

அதனால் தான்

இந்த உலகம்

என்னை ஏற்றுக்

கொள்ள மறுக்கிறது

 

வித்தியாசமானவர்களை

இந்த மனிதர்கள்

ஏற்றுக் கொள்ள

மாட்டார்கள்

அவர்களுக்குத்

தேவை நல்ல

அடிமைகள்

 

அஸ்வத்தாமன் :

அடிமைகள் என்று

யாரைச் சொல்கிறாய்

 

துரியோதனன் :

எதிர்த்துப் பேசாதவர்கள்

ஏன் என்று

கேள்வி கேட்காதவர்கள்

சொன்னது சரி

தான் என்று

தலையாட்டிக்

கொண்டு இருப்பவர்கள்

சுய அறிவு இல்லாமல்

சொன்னதை

மட்டுமே செய்பவர்கள்

இவர்களைத் தான்

நான் அடிமைகள்

என்கிறேன்

 

இத்தகைய

அடிமைகளைத் தான்

இந்த உலகமே

விரும்புகிறது என்கிறேன்

 

பாண்டவர்களும்

இத்தகைய

அடிமைகள் தான்

 

பீஷ்மர் விதுரர்

கிருபர் உட்பட

யாராவது

தவறான

விஷயத்தைச் சொன்னால்

தவறாகச்

சொல்கிறீர்களே

என்று எதிர்த்துப்

பேச மாட்டார்கள்

 

ஏன் தவறாகச்

சொல்கிறீர்கள் என்று

கேள்வி கேட்க

மாட்டார்கள்

 

நீங்கள் சொன்னது

சரி தான் என்று

தவறை

நியாயப்படுத்தி

தலையாட்டிக்

கொண்டு இருப்பார்கள்

 

சுயஅறிவு இல்லாமல்

தவறை பின்பற்றி

நடந்து

கொண்டிருப்பார்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment