February 19, 2023

ஜபம்-பதிவு-929- மரணமற்ற அஸ்வத்தாமன்-61 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-929-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-61

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

பாண்டுவுக்கு

பிறக்காதவர்கள்

குந்திக்குத்

தகாத உறவு

மூலம்

பிறந்தவனான

யுதிஷ்டிரனுக்கு

அஸ்தினாபுரத்தின்

அரியணை உரியதா

 

அஸ்வத்தாமன் :

உனக்குத் தான்

அஸ்தினாபுரத்தின்

அரியணை உரியது

 

அஸ்தினாபுரத்தின்

அரியணை மீது

உனக்கு மட்டுமே

உரிமை இருக்கிறது

 

துரியோதனன் :

அஸ்தினாபுரத்தின்

அரியணை மீது

எனக்கு

உரிமை இருக்கின்ற

காரணத்தினால் தான்

அஸ்தினாபுரத்தின்

அரசனாக

முயற்சி செய்து

கொண்டிருக்கிறேன்

 

அஸ்வத்தாமன் :

நீ சொல்வது

அனைத்தும் சரிதான்

உன்னுடைய

வார்த்தைகளில்

உண்மை இருக்கிறது

 

உன்னுடைய

செயல்களில்

நியாயம் இருக்கிறது

 

என்னுடைய

அவமானத்தை எப்போது

துடைக்கிறேன்

என்று சொன்னாயோ

அப்போதே

உன்னை என்னுடைய

நண்பனாக

ஏற்றுக் கொண்டு

விட்டேன்

 

இக்கணம் முதல்

நானும் நீயும்

நண்பர்கள்

இந்த

அஸ்வத்தாமனும்

துரியோதனனும்

நண்பர்கள்

 

உன்னுடைய

நண்பர்கள்

எனக்கும்

நண்பர்கள் தான்

உன்னுடைய

எதிரிகள்

எனக்கும்

எதிரிகள் தான்

 

உனக்கு

கிடைக்க வேண்டிய

நீதி கிடைக்காத

காரணத்தினால்

நீதியைத்தேடி

அலையும் உனக்கு

துணையாக இருந்து

உனக்கு நீதியைப்

பெற்றுத் தருவேன்

 

அஸ்தினாபுரத்தின்

அரியணையில்

உன்னை

அமரவைப்பேன்

அதற்கு

தடையாக யார்

வந்தாலும்

அவர்களை

ஒழித்துக் கட்டுவேன்

 

துரியோதனன் :

நண்பா அஸ்வத்தாமா

எனக்கு இது போதும்

 

(மகாபாரதக்கதையில்

நட்பு என்ற

சூரியன் உதயமாகி

சுட்டெரிக்கத்

தொடங்கி விட்டது

அந்த நெருப்பில்

எரியப் போவது யார்

என்று பார்ப்போம்)

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment