February 19, 2023

ஜபம்-பதிவு-928- மரணமற்ற அஸ்வத்தாமன்-60 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-928-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-60

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :

எதை வைத்துச்

சொல்கிறாய்

 

துரியோதனன் :

நடந்ததை

வைத்துத் தான்

 

அஸ்வத்தாமன் :

என்ன நடந்தது

 

துரியோதனன் :

என்னுடைய தந்தை

திருதராஷ்டிரருக்கு

கண் தெரியவில்லை

என்று

அவருடைய தம்பி

பாண்டுவை

அரசராக்கினார்கள்

 

இப்போது

திருதராஷ்டிரருக்கு

பிறந்த என்னை

அரசன் ஆக்காமல்

பாண்டுவுக்கு

பிறக்காத

யுதிஷ்டிரனை

அரசனாக்க

முயற்சி செய்கிறார்கள்

 

என்னுடைய

தந்தைக்கு செய்த

அதே அநீதியை

அதே துரோகத்தை

எனக்கும்

செய்கிறார்கள்

 

அஸ்வத்தாமன் :

என்ன யுதிஷ்டிரன்

பாண்டுவுக்கு

பிறக்காதவனா

 

துரியோதனன் :

ஆமாம் பாண்டுவுக்கு

பிறக்காதவன்

தான் யுதிஷ்டிரன்

ஆனால்

குந்திக்குப் பிறந்தவன்

 

அஸ்வத்தாமன் :

எனக்கு குழப்பமாக

இருக்கிறது

 

துரியோதனன் :

நான் சொல்வதைக்

கேட்டால் உனக்கு

தலையே சுற்றும்

சொல்கிறேன் கேள்

 

என்னுடைய சித்தப்பா

பாண்டுவுக்கு

உடல் உறவு

கொள்ளும்

தகுதி கிடையாது

 

அதனால் குந்தி

எமதர்மனுடன்

உடல்

உறவு கொண்டு

யுதிஷ்டிரனைப்

பெற்றாள்

 

வாயு பகவானுடன்

உடல் உறவு

கொண்டு

பீமனைப் பெற்றாள்

 

இந்திரனுடன்

உடல் உறவு

கொண்டு

அர்ஜுனனைப் பெற்றாள்

 

அது மட்டும்

கிடையாது

 

பாண்டுவின்

இரண்டாவது

மனைவி மாத்ரி

அஸ்வினி தேவர்கள்

என்னும்

இரட்டையர்களுடன்

உடல் உறவு

கொண்டு

நகுலன்

சகாதேவன்

என்ற

இரட்டையர்களைப்

பெற்றாள்

 

இப்போது சொல்

திருதராஷ்டிரனுக்கு

உண்மையாகப்

பிறந்த

இந்த

துரியோதனனுக்கு

அஸ்தினாபுரத்தின்

அரியணை உரியதா

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர் &

   பேச்சாளர்

-----K.பாலகங்காதரன்

 

----22-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment