June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-21


              ஜபம்-பதிவு-513
        (அறிய வேண்டியவை-21)

“இருந்தாலும் நான்
என்னுடைய
தந்தையை
சந்தித்து
சக்கர வியூகத்திற்குள்
இருந்து
வெளியே வருவது
எப்படி
என்பதை
கற்றுக் கொள்ள
முயற்சி
செய்தேன் ;
அவரை
சந்தித்து
கற்றுக் கொள்ள
எனக்கு
நேரமே
கிடைக்கவில்லை ;”

“நேரம்
கிடைக்கவில்லையா
அல்லது
காலம்
ஒத்துழைக்கவில்லையா
என்பது
எனக்கு
தெரியவில்லை”

உத்தரை :
“சக்கர வியூகத்தைப்
பற்றி அறிந்து
வைத்திருப்பவர்கள்
இவர்கள்
இருவர்
மட்டும்
தானா?”

அபிமன்யு :
“பாண்டவர்களில்
என்னுடைய
தந்தைக்கும்
பாண்டவர்களை
வழி நடத்திக்
கொண்டிருக்கும்
வசுதேவ
கிருஷ்ணனுக்கும்
சக்கர வியூகம்
தெரியும் “

உத்தரை :
“கௌரவர்களில்…….?”

அபிமன்யு :
“துரோணாச்சாரியாருக்குத்
தெரியும்”

உத்தரை :
“வேறு யாருக்குத்
தெரியும்?”

அபிமன்யு :
“எனக்குத்
தெரிந்தவரை
இவர்களுக்கு
மட்டும் தான்
சக்கர வியூகம்
தெரியும்”

உத்தரை :
“அப்படி
என்றால்
நீங்கள் ஏன்
உங்களுடைய
தந்தையையும்
பரமாத்மா
கிருஷ்ணனையும்
வற்புறுத்தி
கற்றுக்
கொடுங்கள்
என்று
கேட்கக் கூடாது ;
நீங்கள்
வற்புறுத்திக்
கேட்டால்
சொல்ல
மாட்டார்களா ?”

அபிமன்யு :
“உயர்ந்தவர்களை
வற்புறுத்தி
உயர்ந்த
விஷயங்களை
கற்றுக் கொள்ள
முடியாது ;
எனக்கு
அந்தக்
கலையை
கற்றுக்
கொள்ளக்கூடிய
தகுதி
வரும்போது
அவர்கள்
தானாகவே
வந்து கற்று
கொடுப்பார்கள்”

“உயர்ந்த
விஷயங்களை
உயர்ந்தவர்களிடமிருந்து
கற்றுக்
கொள்ள
வேண்டும்
என்றால்
முதலில்
நம்முடைய
தகுதியை நாம்
வளர்த்துக்
கொள்ள
வேண்டும்”

“உயர்ந்த
விஷயங்களை
கற்றுக்
கொள்வதற்கான
தகுதியை நாம்
வளர்த்துக்
கொண்டால்
உயர்ந்த
விஷயங்களை
கற்றுக்
கொடுக்க
குரு தன்னால்
வருவார்
என்ற
காரணத்தினால் தான்
நான்
இன்று வரை
அமைதியாக
இருக்கிறேன்”

உத்தரை  :
“எவ்வளவு
காலம்
அமைதியாக
இருப்பீர்கள்?”

அபிமன்யு :
“காலம்
கனியும் வரை”

உத்தரை :
“காலம்
எப்போது
கனியும்?”

அபிமன்யு :
“தெரியவில்லை”

உத்தரை :
“காலம் 
கனியவில்லை
என்றால்……….?”

அபிமன்யு :
“விதியின் வழியில்
என் வாழ்க்கை
அமையும்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment