June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-26


                ஜபம்-பதிவு-518
          (அறிய வேண்டியவை-26)

துரியோதனன் :
“குருவே !
அபிமன்யுவைக்
கட்டுப் படுத்த
முடியாதா?
அவனை
வீழ்த்த
முடியாதா ?”

துரோணர் :
“ஒன்றை
நன்றாக ஞாபகம்
வைத்துக் கொள்
துரியோதனா !
அபிமன்யுவை
வீழ்த்தவில்லை
என்றால் நம்மால்
யுதிஷ்டிரனை
நெருங்க முடியாது
அப்புறம்
யுதிஷ்டிரனை
கைது செய்வது
என்பது இயலாத
காரியம் ஆகி விடும் “

“யுதிஷ்டிரனைக்
கைது செய்ய
வேண்டும் என்றால்
அபிமன்யு
வீழ்த்தப்படத் தான்
வேண்டும் “

“யுதிஷ்டிரனுக்கும்
எனக்கும் இடையில்
தடையாக இருந்து
யுதிஷ்டிரனைக்
கைது செய்ய
விடாமல் தடுத்துக்
கொண்டிருப்பது
அபிமன்யு மட்டுமே
அபிமன்யுவை
வீழ்த்துவதற்கு
முயற்சி செய் “

துரியோதனன் :
“அதற்கு நான்
என்ன செய்ய
வேண்டும் குருவே”

துரோணர் :
“அர்ஜுனனின்
மகனான
அபிமன்யுவை
யாராலும்
கட்டுப் படுத்த
முடியாது
அவனை
வீழ்த்துவது
அவ்வளவு
எளிதான
காரியம்
கிடையாது “

“முதலில் அவனை
நிராயுதபாணியாக்குங்கள்
ஆயுதங்கள்
ஏதுமின்றி
நிராயுதபாணியாக
தன்னந்தனியாக
இருக்கும் போது
மட்டும் தான்
அபிமன்யுவைக்
கொல்ல முடியும்”

“ஆயுதத்தை
அவன் கையில்
வைத்திருக்கும்
போது அவனைக்
கொல்ல முடியாது”

“முதலில்
அபிமன்யுவை
நிராயுதபாணியாக்குங்கள்”

துரியோதனன் :
“அப்படியே செய்கிறோம்”

(பாண்டவர்கள்
கூடாரத்தில்)

தர்மர் :
“பீமா !
எனக்கு
பயமாக
இருக்கிறது “

“உலகத்திலேயே
சிறந்த வீரர்கள்
என்று
சொல்லப்படக்
கூடியவர்களுடன்
அபிமன்யு
யாருடைய
துணையும்
இல்லாமல்
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருக்கிறான்  ;
போரிட்டுக்
கொண்டிருக்கிறான்
என்று சொல்வதை
விட போராடிக்
கொண்டிருக்கிறான்
என்று தான்
சொல்ல வேண்டும் ;”

“அவர்கள்
ஒவ்வொருவருமே
ஆயிரக்
கணக்கானவர்களைக்
கொல்லக் கூடிய
ஆற்றல்
படைத்தவர்கள் ஆயிற்றே ;
போர் தந்திரத்தில்
அவர்களை
மிஞ்சியவர்கள்
யாரும் இருக்க
முடியாதே !”

“அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து
அபிமன்யுவை
எதிர்க்கிறார்களே !
அவர்களை
அபிமன்யு
எப்படி தடுக்கப்
போகிறான் ;
சிறுவனாயிற்றே
அவனால் எவ்வளவு
நேரம் அவர்களை
தடுக்க முடியும் “

“நாம் அனைவரும்
அபிமன்யுவிற்கு
உதவ முடியாமல்
போய் விட்டதே ;
அபிமன்யுவிற்கு
ஏதும் நேர்ந்து
விட்டால்
நான் எப்படி
அர்ஜுனனைப்
பார்ப்பேன் ;
அர்ஜுனன்
என்ன கேள்வி
கேட்டாலும்
அதற்கு என்னிடம்
பதில் இருக்காதே “

“இப்படி ஒரு
இக்கட்டான
சூழ்நிலையில்
மாட்டிக்
கொண்டானே “

“என்னைக் கைது
செய்து போரை
முடிவுக்குக் கொண்டு
வரக்கூடாது
என்பதற்காக
சிறுவனான
அபிமன்யு
தன்னந்தனியாக
போராடிக்
கொண்டிருக்கிறான்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment