June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-25


                 ஜபம்-பதிவு-517
          (அறிய வேண்டியவை-25)

அபிமன்யு :
“துரோணர்
அவர்களே !
கங்கை மைந்தர்
பீஷ்மர்
இருக்கும் போது
உருவாக்கப்பட்ட
விதிகளின் படி
ஒருவருக்கொருவர்
தானே நேருக்கு
நேராக நின்று
எதிர்த்துப் போர்
புரிய வேண்டும் “

“கெளரவர்களுடைய
தலைமைச்
தளபதியாக
இருக்கும்
தங்களுக்கு
இந்த விதி
தெரியாதா
அல்லது
தெரிந்தும்
தெரியாதது போல்
இருக்கிறீர்களா ?”

“இந்த அக்கிரமச்
செயலை
உங்களால் எப்படி
பார்த்துக் கொண்டு
கண்டும்
காணாதது போல்
இருக்க முடிகிறது ;
ஏன் இந்த
அக்கிரமச் செயலுக்கு
துணை போகிறீர்கள் ;
அதர்மத்துக்கு
துணையாக
நிற்கிறீர்கள் “

“தவறு
செய்பவர்களுடைய
தவறை
சுட்டிக் காட்டாமல்
நீங்களும் ஏன்
சேர்ந்தே தவறை
செய்கிறீர்கள் “

(அனைவரையும்
பார்த்து
அபிமன்யு
பேசுகிறான்)

அபிமன்யு :
“என்னுடன்
போர் புரிய
ஆசைப்பட்டால்
தனித்தனியாக
ஒவ்வொருவராக
வாருங்கள் “

“ஒரு வீரனிடமிருந்து
வீரம் எப்படி
வெளிப்படும்
என்பதை
உங்களுக்கு
காட்டுகிறேன் ;
உங்கள்
வாழ்க்கையில்
இது வரை
நீங்கள் காணாத
ஒரு வீரனை
உங்களைக்
காணும்படிச்
செய்கிறேன் ;
மரணபயத்தை
உங்களுக்குள்
எழுப்பிக்
காட்டுகிறேன் ;
அச்சத்தை உங்கள்
இதயத்தில்
உருவாக்கிக்
காட்டுகிறேன் ;
கலக்கத்தை
உங்கள் கண்களில்
தோன்றச் செய்து
காட்டுகிறேன் ;
இவனுடன்
போரிட்டு
மிகப்பெரிய
தவறை செய்து
விட்டோமே என்று
எண்ணத்தை
உங்களுக்குள்
விதைத்துக்
காட்டுகிறேன்;
புறமுதுகு காட்டி
ஓடுவது எப்படி
என்பதை நீங்கள்
அறியாமல் இருந்தால்
நீங்கள் புறமுதுகு
காட்டி ஓடும் போது
அதை தெரிந்து
கொள்ளும்படிச்
செய்கிறேன் ;”

“துணிவிருந்தால்
நெஞ்சில்
தைரியமிருந்தால்
நேர்மை என்பது
உங்களுக்கு
இருந்தால்
தனித்தனியாக
ஒவ்வொருவராக
என்னுடன் போர்
செய்ய வாருங்கள் “

“தைரியம் என்பது
உங்களுக்கு
இல்லாமல்
இருந்தால் ;
துணிவு என்பது
உங்களை விட்டு
விட்டு ஓடி
விட்டிருந்தால் ;
நேர்மையை
சாகடித்து விட்டு
இங்கே
வந்திருந்தால் ;
அனைவரும்
வாருங்கள்
ஒன்றாக வாருங்கள்
இந்த சிறுவனின்
வீரத்திற்கு பதில்
சொல்லுங்கள் “

(அபிமன்யுவின்
வில்லிருந்து
புறப்பட்ட அம்பு
அனைவர்
உடலையும்
துளைத்து
காயப்படுத்துகிறது ;
அனைவருடைய
உடலிலிருந்தும்
கொட்டிய இரத்தம்
அவர்கள் உடலை
நனைத்தது ;
காயம் பட்டால்
எப்படி இருக்கும்
அதனுடைய
வேதனை
எப்படி இருக்கும்
என்பதை
அனைவரும்
உணர்ந்து
கொண்டனர் ;
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
சக்கர வியூகத்திற்குள்
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருக்கும்
அபிமன்யுவின்
வீரம் அவர்கள்
அனைவரையும்
மலைக்க வைத்தது ;
மட்டுமல்லாமல்
அனைவரையும்
அச்சப்படவும்
வைத்தது ;
துரியோதனன்
துரோணர் அருகில்
செல்கிறான்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment