June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-24


                ஜபம்-பதிவு-516
           (அறிய வேண்டியவை-24)

(அபிமன்யு
சக்கர வியூகத்தை
ஒரு முறை
சுற்றி வந்து
பார்க்கிறான் ;
பின்னர் அபிமன்யு
சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே
செல்கிறான்
அவனைத்
தொடர்ந்து
செல்வதற்காக
தர்மர் பீமன்
நகுலன்
சகாதேவன்
ஆகியோர்
முயற்சி
செய்தனர்

பாண்டுவின்
மகன்
அர்ஜுனனைத்
தவிர்த்து
மற்ற பாண்டவர்கள்
நால்வரையும்
ஒரு நாள் மட்டும்
ஜெயத்ரதனால்
தடுக்க முடியும்
என்ற வரத்தை
சிவபெருமானிடம்
இருந்து பெற்ற
ஜெயத்ரதன்
சக்கர வியூகத்தை
அடைத்து
பாண்டவர்கள்
நால்வரையும்
சக்கர வியூகத்திற்குள்
நுழைய
விடாமல்
தடுத்து
விடுகிறான்

இவர்கள்
நால்வரும்
சக்கர வியூகத்திற்கு
வெளியே
எதுவும் செய்ய
முடியாமல் நின்று
விடுகின்றனர்
அபிமன்யு
மட்டும்
சக்கர
வியூகத்திற்குள்
மாட்டிக்
கொள்கிறான்)

கர்ணன் :
“பால் குடிக்கும்
சிறுவனுக்கு
போர்க்களத்தில்
என்ன வேலை
வீட்டில் பூப்பந்து
விளையாட
வேண்டியவன்
போர்க்களம்
என்று தெரியாமல்
வந்து விட்டாயா ?
வீட்டிற்கு சென்று
சிறுவர்களுடன்
விளையாடு - நீ
விளையாடுவதற்கு
இந்த
போர்க்களத்தில்
யாரும் இல்லை “

அபிமன்யு :
“நான் விளையாட
வரவில்லை ;
வேட்டையாட
வந்திருக்கிறேன் ;
உலகத்திலேயே
சிறந்த
வீரர்கள் என்று
சொல்லப்படுகிறார்களே
உண்மையிலேயே
அவர்கள்
உலகத்திலேயே
சிறந்த வீரர்கள்
தானா என்பதைக்
காண்பதற்காகவே
வந்திருக்கிறேன் “

“என்னைப்
பார்த்து
உங்களுக்கு
பயமாக
இருந்தால் - நான்
உங்களுக்கு
உயிர்ப்பிச்சை
தருகிறேன்
போர்க்களத்தை
விட்டு சென்று
விடுங்கள் “

கர்ணன் :
“பேச்சில்
இருக்கும் வீரம்
உன்னுடைய வில்
வீச்சில் இருக்குமா?”

அபிமன்யு :
“அதையும்
நீங்கள்
பார்க்கத் தானே
போகிறீர்கள்”

துரியோதனன் :
“நாங்கள்
வேண்டுமானாலும்
உனக்கு
உயிர்ப்பிச்சை
தருகிறோம்
ஓடி விடு
இங்கிருந்து
சிறுவனே!”

அபிமன்யு :
“சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே
வந்திருக்கிறேன் ;
இப்போதும்
என்னை
சிறுவன்
என்று தான்
நினைக்கிறீர்களா ?”

(அபிமன்யுவைச்
சூழ்ந்து கொண்டு
துரோணர், கிருபர்,
துரியோதனன்,
துச்சாதனன்,
அஸ்வத்தாமன்,
கர்ணன்,
கிருதவர்மா,
விகர்ணன், சகுனி,
சல்லியன்
ஆகியோர்
ஒன்றாக
இணைந்து
தாக்குகிறார்கள்)

அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து
தன்னை எதிர்த்துப்
போர் புரிவதைக்
கண்டு சிறிது கூட
பயப்படாமல்
அபிமன்யு
தன்னுடைய
வில்லின் மூலம்
அனைவரையும்
எதிர்த்துக்
கடுமையாக
போர் புரிகிறான்  ;
தன்னுடைய
வில்லிலிருந்து
புறப்படும் அம்பு
மூலம்
அனைவரையும்
காயப்படுத்துகிறான் ;
அனைவரையும்
தன்னுடைய
வீரத்தின் மூலம்
அச்சத்தை உண்டு
பண்ணுகிறான் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment