October 23, 2021

பதிவு-2-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-2-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

இன்பத்தை

அனுபவிக்க

வேண்டும் என்று

நினைப்பவர்கள்

ஒன்றை மறந்து

விடுகின்றனர்

ஒரு இன்பத்தை

அனுபவிக்கும் போது

தங்களுடைய

புண்ணியத்தில்

ஒரு பகுதி

கழிந்து விடுகிறது

என்பதை மறந்து

விடுகின்றனர்

 

எப்போது

எல்லாம்

எந்த காலத்தில்

எல்லாம்

எந்த இடத்தில்

எல்லாம்

எந்த நேரத்தில்

எல்லாம்

எந்த சூழ்நிலையில்

எல்லாம்

மனிதன் ஒரு

இன்பத்தை

அனுபவிக்கிறானோ

அப்போது எல்லாம்

மனிதனுடைய

பாவமும்

புண்ணியமும்

சேர்ந்த கர்மாவில்

புண்ணியத்தில்

ஒன்று கழிகிறது

என்று பொருள்

 

மனிதன்

தன்னுடைய

வாழ்வில்

இன்பத்தை

அனுபவிக்கும் போது

இன்பமும்

துன்பமும் சேர்ந்த

தன்னுடைய

கர்மாவில்

புண்ணியத்தில்

ஒன்று கழிகிறது

என்பதையும்

தொடர்ந்து

இன்பத்தையே

அனுபவித்துக்

கொண்டு இருந்தால்

தன்னுடைய

புண்ணியங்கள்

தொடர்ந்து

கழிந்து கொண்டு

இருக்கின்றன

என்பதையும்,

இப்படியே

தொடர்ந்து

இன்பத்தையே

அனுபவித்துக்

கொண்டு இருந்தால்

புண்ணியங்கள்

அனைத்தும்

கழிந்து விடும்

என்பதையும்

புண்ணியங்கள்

எதுவும் இல்லை

என்றால்

வரும் காலங்களில்

இன்பம் எதையும்

அனுபவிக்க

முடியாது

என்பதையும்

இன்பம் என்பதை

அனுபவிக்க

வேண்டும் என்றால்

நாம் புண்ணியங்கள்

செய்ய வேண்டும்

என்பதையும்

உணர்ந்து

கொள்ள வேண்டும்

 

இன்பத்தின்

முதல் நிலை

என்பது

சந்தோஷமாக

நாம் விரும்பும்

பாடலைப் பாடுவது

அந்தப் பாடலை

நம்மை அறிந்த

நிலையிலும்

பாடலைப் பாடலாம்

நம்மை அறியாத

நிலையிலும்

பாடலைப் பாடலாம்

 

இன்பத்தின்

இடைப்பட்ட நிலை

என்பது

சந்தோஷமாக

நாம் விரும்பும்

நடனத்தை ஆடுவது

அந்த நடனத்தை

நம்மை அறிந்த

நிலையிலும்

நடனத்தை ஆடலாம்

நம்மை அறியாத

நிலையிலும்

நடனத்தை ஆடலாம்

 

இன்பத்தின்

முடிவு நிலை

அல்லது

உச்சநிலை என்பது

கண்ணிலிருந்து

வரும் கண்ணீர்

அந்தக் கண்ணீர்

ஆனந்தக் கண்ணீர்

எனப்படும்

 

(2) துன்பம்

 

இந்த உலகத்தில்

உள்ள அனைவரும்

துன்பம் என்ற

ஒன்று தங்கள்

வாழ்வில்

எதிர்ப்படக் கூடாது

என்று

நினைக்கின்றனர்

 

துன்பம்

ஏற்பட்டாலே

கலங்குகின்றனர்

துன்பத்தை கண்டு

நடு நடுங்குகின்றனர்

துன்பதைப்

பார்த்து

பயப்படுகின்றனர்

துன்பம் ஏற்பட்டால்

வருந்துகின்றனர்

துன்பம் தனக்கு

ஏற்படக்கூடாது

என்று

விரும்புகின்றனர்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

 

No comments:

Post a Comment