October 23, 2021

பதிவு-3-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-3-அருள்சேர்ந்த-   

திருக்குறள்

 

துன்பமற்ற

வாழ்க்கையேயே

வாழ

ஆசைப்படுகின்றனர்

துன்பமற்று

வாழ

வேண்டும் என்று

நினைப்பதினால்

கடவுளை நோக்கி

ஓடுகின்றனர்

மதத் தலைவர்களை

நாடுகின்றனர்

ஆன்மீகவாதிகளை

தேடுகின்றனர்

தனக்கு வந்த

துன்பம் தான்

அதிகம் என்று

நினைத்துக் கொண்டு

துன்புறுகின்றனர்

 

துன்பத்தை

அனுபவிக்கக் கூடாது

என்று நினைப்பவர்கள்

ஒன்றை மறந்து

விடுகின்றனர்

ஒரு துன்பத்தை

அனுபவிக்கும் போது

தங்களுடைய

பாவத்தில்

ஒரு பகுதி

கழிந்து விடுகிறது

என்பதை மறந்து

விடுகின்றனர்

எப்போது எல்லாம்

எந்த காலத்தில்

எல்லாம்

எந்த இடத்தில்

எல்லாம்

எந்த நேரத்தில்

எல்லாம்

எந்த சூழ்நிலையில்

எல்லாம்

மனிதன் ஒரு

துன்பத்தை

அனுபவிக்கிறானோ

அப்போது எல்லாம்

பாவமும்

புண்ணியமும்

சேர்ந்த

மனிதனுடைய

கர்மாவில்

பாவத்தில் ஒன்று

கழிகிறது

என்று பொருள்

 

மனிதன் தன்னுடைய

வாழ்வில் துன்பத்தை

அனுபவிக்கும் போது

தன்னுடைய

கர்மாவில்

பாவத்தில் ஒன்று

கழிகிறது என்பதையும்

தொடர்ந்து

பாவத்தையே

அனுபவித்துக்

கொண்டு இருந்தால்

தன்னுடைய

பாவங்கள்

தொடர்ந்து கழிந்து

கொண்டு இருக்கின்றன

என்பதையும்,

இப்படியே

தொடர்ந்து

துன்பத்தையே

அனுபவித்துக்

கொண்டு இருந்தால்

துன்பங்கள் அனைத்தும்

கழிந்து விடும்

என்பதையும்

பாவங்கள் எதுவும்

இல்லை என்றால்

துன்பம் எதையும்

அனுபவிக்க முடியாது

என்பதையும்

உணர்ந்து

கொள்ள வேண்டும்

 

துன்பத்தின்

முதல் நிலை

என்பது

சோகமாக நாம்

விரும்பும்

பாடலைப் பாடுவது

அந்தப் பாடலை

நம்மை அறிந்த

நிலையிலும்

பாடலைப் பாடலாம்

நம்மை அறியாத

நிலையிலும்

பாடலைப் பாடலாம்

 

துன்பத்தின்

இடைப்பட்ட நிலை

என்பது

சோகமாக நாம்

விரும்பும்

நடனத்தை ஆடுவது

அந்த நடனத்தை

நம்மை அறிந்த

நிலையிலும்

நடனத்தை ஆடலாம்

நம்மை அறியாத

நிலையிலும்

நடனத்தை ஆடலாம்

 

துன்பத்தின்

முடிவு நிலை

அல்லது

உச்சநிலை என்பது

கண்ணிலிருந்து

வரும் கண்ணீர்

அந்தக் கண்ணீர்

அழுகைக் கண்ணீர்

எனப்படும்

 

இன்பத்தின்

உச்ச நிலையில்

வருவது

ஆனந்தக் கண்ணீர்

துன்பத்தின்

உச்ச நிலையில்

வருவது

அழுகைக் கண்ணீர்

 

கண்ணின் ஓரமாக

கண்ணீர் வந்தால்

அது

ஆனந்தக் கண்ணீர்

 

மூக்கின் ஓரமாக

கண்ணீர் வந்தால்

அது

அழுகைக் கண்ணீர்

அதைத் தான்

மூக்கால் அழுகிறான்

என்பார்கள்

 

ஆனந்தக் கண்ணீர்

நாவில் பட்டால்

இனிக்கும்

அழுகைக் கண்ணிர்

நாவில்

பட்டால் கரிக்கும்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment