October 23, 2021

பதிவு-8-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-8-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

கண்களை

மூடும் போது

இரண்டு

புருவங்களுக்கு

மத்தியில்

இருள் என்பது

மட்டுமே

நிலையாக

தோன்றினால்

நாம் பிரபஞ்ச

சக்தியுடன்

இணைந்து

இருக்கிறோம்

என்று பொருள்

 

நம்முடைய

ஜீவாத்மா

பரமாத்மாவுடன்

இணைந்து

இருக்கிறது

என்று பொருள்

 

நாம் சமாதி

நிலையில்

இருக்கிறோம்

என்று பொருள்

 

நாம்

இறைவனுடன்

இரண்டறக்

கலந்து

இருக்கிறோம்

என்று பொருள்

 

நாம் பேரின்பப்

பெருவெள்ளத்தில்

நீந்திக் கொண்டு

இருக்கிறோம்

என்று பொருள்

 

பிரபஞ்ச சக்தியுடன்

இணைந்து

இருப்பவர்களுக்கு

பிரபஞ்ச சக்தியே

அனைத்தும்

அளிக்கும்

தேவையானவற்றை

அளிக்கும்

விருப்பமானவற்றை

அளிக்கும்

இக்கட்டான

சூழ்நிலையிலிருந்து

நம்மை

காப்பாற்றும்

 

நம்மைச் சுற்றி

இருப்பவர்கள்

இவன் இந்த

பிரச்சினையிலிருந்து

வெளியே

வரவே

முடியாது என்று

சொன்னாலும்

அந்த

பிரச்சினையிலிருந்து

வெளியே

கொண்டு வந்து

காப்பாற்றும்

 

மரணத்தையே

முத்தமிடக்கூடிய

நிலை வந்தாலும்

மரணத்தையே

தள்ளி

போடக்கூடிய

நிலையை

உருவாக்கும்

இது தான்

தவத்தின்

உயர்ந்த நிலை

ஆகும்

 

எளிமையாக

சொல்ல

வேண்டும்

என்றால்

பிரபஞ்ச

சக்தியுடன்

இணைந்து

இருப்பவர்களுக்கு

அதாவது

பேரின்பத்தில்

திளைப்பவர்களுக்கு

காலத்தையே

மாற்றும்

சக்தி உண்டு

என்பதைத்

தெரிந்து

கொள்ள

வேண்டும்

 

நம்முடைய

வாழ்வில்

இன்பம்

துன்பம்

அமைதி

பேரின்பம்

என்ற நான்கு

வெளிப்படுகிறது

அவ்வாறு

வெளிப்படும்

இந்த நான்கில்

இன்பம்

துன்பம்

இரண்டையும்

ஒன்றாகப்

பாவித்து

அமைதி என்ற

நிலையை

அடைந்து

இறைவனுடன்

இரண்டறக்

கலந்து

இறைவனின்

அருளைப்

பெற்றவர்களுக்கு

பிறவிகள்

பல எடுத்து இந்த

உலகமாகிய

நரகத்தில்

வாழ வேண்டிய

அவசியம் இல்லை

 

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

"அருள்சேர்ந்த

நெஞ்சினார்க்

கில்லை

இருள்சேர்ந்த

இன்னா

உலகம்

புகல்""

 

என்ற

திருக்குறளின்

மூலம்

தெளிவு

படுத்துகிறார்

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment