October 23, 2021

பதிவு-6-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-6-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

இந்தப் பிரபஞ்சத்தில்

உள்ள எந்த

ஒரு பொருளையும்

நாம் பார்க்க

வேண்டும் என்றால்

இரண்டு

விஷயங்கள் தேவை

 

ஒன்று

கண் பார்வை

 

இரண்டு

ஒளி

 

கண்பார்வை

இருந்து

ஒளி இல்லை

என்றால்

கண்பார்வையை

வைத்துக் கொண்டு

எந்த ஒரு

பொருளையும்

நம்மால்

பார்க்க முடியாது

 

அதைப்போல

ஒளி இருந்து

கண்பார்வை இல்லை

என்றால்

ஒளியை

வைத்துக் கொண்டு

எந்த ஒரு

பொருளையும்

நம்மால்

பார்க்க முடியாது

 

இந்த உலகத்தில்

உள்ள எந்த

ஒரு பொருளையும்

பார்க்க வேண்டும்

என்றால்

கண்பார்வையும்

ஒளியும் தேவை

 

நாம்

உறங்கிக் கொண்டு

இருக்கும் போது

கனவு வருகிறது

கனவு காண்கிறோம்

கனவில் பல்வேறு

நிகழ்வுகளைப்

பார்க்கிறோம்

 

நாம்

உறங்கிக் கொண்டு

இருக்கும் போது

கனவுகளை எவ்வாறு

பார்க்கிறோம்

கனவுகளை எவ்வாறு

நம்மால்

பார்க்க முடிகிறது

 

நமக்கு வெளியே

கண்பார்வையும்

ஒளியும்

இருக்கும் போது

எப்படி பொருள்களைப்

பார்க்கிறோமோ

அவ்வாறே

நமக்கு உள்ளே

ஒளியும்

கண்பார்வையும்

இருக்கின்ற

காரணத்தினால் தான்

நாம்

உறங்கிக் கொண்டு

இருக்கும் போதும்

கனவுகள்

நமக்கு தெரிகிறது

நம்மால்

கனவுகளைப்

பார்க்க முடிகிறது

 

வெளியில்

இருப்பது

உள்ளேயும்

இருக்கிறது

வெளியில் எப்படி

ஒளியும்

கண்பார்வையும்

இருந்தால்

பொருள்கள்

தெரிகிறதோ

அதைப்போல

நமக்கு

உள்ளேயும்

ஒளியும்

கண்பார்வையும்

இருக்கின்ற

காரணத்தினால் தான்

கனவுகளில்

நடக்கக்கூடிய

நிகழ்வுகள்

நமக்குத் தெரிகிறது

 

இதிலிருந்து

நாம் ஒன்றைத்

தெரிந்து கொள்ள

வேண்டும்

நமக்கு உள்ளே

ஒளி இருக்கிறது

கண் பார்வை

இருக்கிறது

 

ஒளி

என்பது

இயக்க நிலை

கண்பார்வை

என்பது

இருப்பு நிலை

 

இந்த உலகத்தில்

உள்ள சில பேர்

கடவுள் ஒளியாக

இருக்கிறான் என்பார்கள்

தவத்தின்

உயர்ந்த நிலையில்

நமக்கு உள்ளே

புருவ மத்தியில்

ஒளி தெரியும்

என்பார்கள்

புருவ மத்தியில்

ஒளி தெரிந்தால்

தவத்தின்

உயர்ந்த நிலையை

அடைந்து விட்டதாக

சொல்வார்கள்

புருவ மத்தியில்

ஒளி தெரிவது

தவத்தின்

உயர்ந்த நிலை

கிடையாது

புருவ மத்தியில்

ஒளி தெரிவது

தவத்தின்

உயர்ந்த நிலை

என்பது

தவறான கருத்தாகும்

புருவ மத்தியில்

ஒளி தெரிவது

என்பது

தவத்தின்

ஆரம்ப நிலை

மட்டுமே ஆகும்

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment