October 23, 2021

பதிவு-7-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-7-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

ஒளி என்பது

இயக்க நிலையில்

இருப்பது

இயக்க நிலையில்

இருப்பவைகள்

அனைத்தும்

தனது இயக்கம்

நின்றவுடன்

இருப்பு நிலையாகி

இருப்பு நிலையுடன்

ஒன்றாகி

இருப்பு

நிலையாகவே

மாறி விடும்

 

முதலில்

இருள் இருக்கிறது

இருளுக்குள்

ஒளி வருகிறது

ஒளி கரைகிறது

ஒளி அழிகிறது

இறுதியில்

இருளே இருக்கிறது

 

ஆரம்பத்தில்

இருந்ததும்

இருள் தான்

முடிவில்

இருப்பதும்

இருள் தான்

 

ஒளி என்பது

இருளுக்குள் வந்து

விட்டு மட்டுமே

செல்கிறது

ஒளி என்பது

இருளுக்குள்

தங்கி விட்டு

மட்டுமே செல்கிறது

ஒளி என்பது

இருளுக்குள்

தன்னுடைய

வேலையை செய்ய

மட்டுமே வருகிறது

ஒளி என்பது

இருளுக்குள்

தன்னுடைய

வேலையை

முடித்தவுடன்

இருளில் கரைந்து

விடுகிறது

ஒளி என்பது

இருளுக்குள்

தன்னுடைய

வேலையை

முடித்தவுடன்

இருளாகவே மாறி

விடுகிறது

இதிலிருந்து

ஒளி என்பது

நிலையானது

கிடையாது என்பது

தெரிகிறது

ஒளியால் நிலையாக

இருக்க முடியாது

என்பது தெரிகிறது

 

ஒளி என்பது

இயக்க நிலையில்

இருப்பது

இயக்க நிலையில்

இருப்பவைகள்

அனைத்தும்

நிலையானவைகள்

கிடையாது

அப்படி

இருக்கும் போது

ஒளியை எப்படி

கடவுள் என்று

சொல்ல முடியும்

 

நிலையாக

இல்லாதது எப்படி

கடவுளாக

இருக்க முடியும்

நிலையாக

இருப்பது மட்டுமே

கடவுளாக

இருக்க முடியும்

 

நிலையாக

இருப்பது

இருள் மட்டும் தான்

எனவே

நிலையாக

இருக்கும் இருளே

கடவுள் ஆகும்

நிலையற்ற ஒளி

என்பது

கடவுள் கிடையாது

என்பதை உணர்ந்து

கொள்ள வேண்டும்

 

இருளில் தான்

அனைத்து பரிணாம

வளர்ச்சிகளும்

நிகழ்கின்றன

 

இருளில் தான்

பிரபஞ்ச பரிணாமங்கள்

அனைத்தும் ஏற்பட்டும்

நடந்தும் வருகிறது

 

இருளில் தான்

பிரபஞ்ச பரிணாமங்கள்

நடைபெற்று

பிரபஞ்சமாகத்

திகழ்கின்றது

 

இருளில் தான்

படைத்தல், காத்தல்,

அழித்தல், மறைத்தல்.

அருளல் என்ற

ஐந்து தொழில்கள்

நடைபெற்று

வருகிறது

 

தவத்தின்

உயர்ந்த நிலை

என்பது

நம்முடைய உயிர்

பிரபஞ்ச சக்தியுடன்

இணைந்து

இருப்பது ஆகும்

நம்முடைய

ஜீவாத்மா

பரமாத்மாவுடன்

இணைந்து

இருப்பது ஆகும்

 

தவத்தின்

உயர்ந்த நிலையில்

இரண்டு கண்களை

மூடும் போது

இரண்டு

புருவங்களுக்கு

மத்தியில்

எந்த விதமான

ஒளியும் இருக்காது

எந்தவிதமான

தோற்றங்களும்

இருக்காது

எந்தவிதமான

நிறங்களும்

இருக்காது

இரண்டு

புருவங்களுக்கு

மத்தியில்

சூன்யம் மட்டுமே

இருக்கும்

இருள் என்பது

மட்டுமே இருக்கும்

இருளைத் தவிர

வேறு ஒன்றும்

இருக்காது

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

No comments:

Post a Comment