October 23, 2021

பதிவு-5-அருள்சேர்ந்த- திருக்குறள்

 பதிவு-5-அருள்சேர்ந்த-     

திருக்குறள்

 

நாம் இறக்கும் போது

நம்முடைய

உடலிலிருந்து

உயிர்

பிரியும் போது

உயிருடன்

பாவ புண்ணியங்கள்

அடங்கிய

கர்மா நம்முடைய

உடலை விட்டு

செல்கின்றன

என்பதையும்

தெரிந்து கொள்ளலாம்

 

அவ்வாறு தெரிந்து

கொள்ளும் போது

கடவுள்

நம் உடலில்

எந்த இடத்தில்

இருக்கிறார்

கடவுளை

அடையக்கூடிய

வழி எது

கடவுளை

அடைவதற்கு

பயன்படுத்துவது

எது என்பதை

உணர்ந்து

கொள்ளலாம்

 

அவ்வாறு

உணர்ந்து

கொள்ளும் போது

சித்தவித்தை

எனப்படும்

வாசியோகத்தை

பயன்படுத்தி

தொடர்ந்து

செய்து வரலாம்

 

அவ்வாறு

செய்து வரும் போது

கோபம் நீங்கி

பொறுமை

நிதானம்

என்பது ஏற்பட்டு

அமைதி

என்பது மனதில்

உண்டாகும்

 

இந்த நிலையில்

தான் மனிதன்

என்பவன்

அமைதி என்பது

எவ்வாறு ஏற்படுகிறது

என்பதை உணர்ந்து

கொள்கிறான்

 

(4) பேரின்பம்

 

உலகத்தில் உள்ள

பொருட்களுடன்

தொடர்பு

கொள்ளும் போது

ஏற்படுவது

சிற்றின்பம்

உலகத்தில் உள்ள

பொருட்களை

விட்டு விலகி

இறைவனுடன்

இரண்டறக்

கலக்கும் போது

ஏற்படுவது

பேரின்பம்

 

சிற்றின்பம்

கர்மாவை

உண்டாக்கும்

பேரின்பம்

கர்மாவை

அழிக்கும்

 

சமாதி

என்ற நிலையில்

இருக்கும் போது

பேரின்பம்

என்பது ஏற்படும்

 

சமம் + ஆதி = சமாதி

ஆதி நிலைக்கு

சமாமாக

மனிதன் உயர்வது

சமாதி எனப்படும்

அதாவது

மனிதன் கடவுள்

நிலைக்குச் சமமாக

உயர்வது எனப்படும்

 

சமாதி நிலை

என்பது

தனது அறிவானது

தன்னுடைய

ஆதி நிலையில்

நின்று இந்த

பிரபஞ்சத்

தோற்றங்கள்

அனைத்திலும்

தன்னையும்

ஆதி நிலையையும்

சமமாகப் பார்க்கும்

நிலையாகும்

 

சமாதி நிலை

அனுபவம்

கிடைக்கப் பெற்றவன்

காணக்கூடிய

பொருள்கள்

அனைத்திலும்

தன்னையே காண்பதால்

காண்பவனும்

காணப்படும்

பொருளும்

வேறு வேறு அல்ல

என்பதை

உணர்ந்து கொள்கிறான்

 

 

-----என்றும் அன்புடன்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----23-10-2021

/////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment