March 11, 2025

ஜபம்-பதிவு-1035 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-13

 ஜபம்-பதிவு-1035

அர்ஜுனனைக் கொன்ற

பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-13


காதலும், காமமும் பிரிக்க முடியாதவை என்பதைப் புரிந்து கொண்டால்

வாழ்க்கை சிறப்பாக இருக்கும்


காதலையும், காமத்தையும் புரிந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையை வாழ்க்கையாக வாழுங்கள்


வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம் கிடையாது போராடிப் பார்ப்பதற்கு

வாழ்க்கை என்பது ஒரு பூந்தோட்டம் அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்


வாழ்க்கை உங்களுக்கு நிறைய இன்பங்களைக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது

நீங்கள் தான் அதை எடுக்க முயற்சி செய்யவில்லை


வாழ்க்கை கொடுக்கக் காத்திருக்கும் இன்பங்களை 

வாங்க முயற்சி செய்யுங்கள் அதை ஒதுக்கி விடாதீர்கள்


வாழ்க்கை தரும் இன்பங்களை விட்டு விட்டு

வாழ்க்கை தரும் இன்பம் சுவையா 

போர்க்களம் தரும் இன்பம் சுவையா என்பதை 

ஆராய்ச்சி செய்வதை விட்டு விடுங்கள்


போர்க்களத்தில் வீரம் இன்பம் என்றால் 

வாழ்க்கையில் காதலும், காமமும் இன்பம்

போர்க்களத்தை கண்ட நீங்கள் 

வாழ்க்கையைக் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள் 


வாழ்க்கையின் இன்பத்தின் கதவைத் தட்டுங்கள்

அது உங்களுக்கு இன்பத்தை அளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது


சித்திராங்கதை :  வெள்ளை நிறத்தில் இருந்தால் மட்டும் தான் ஒரு பெண் அழகு என்று ஏற்றுக் கொள்வீர்களா?


கருப்பு நிறத்தில் இருந்தால் ஒரு பெண் அழகு என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?


அர்ஜுனன் : நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று தான் சொன்னேனே தவிர, நீங்கள் வெள்ளை நிறமாக இருக்கின்ற காரணத்தினால் தான் அழகாக இருக்கிறீர்கள் என்று நான் சொல்லவேயில்லையே.


அழகுக்கும் நிறத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

சம்பந்தம் இல்லாத ஒன்றை சம்பந்தப்படுத்தி வைத்து விட்டது இந்த சமுதாயம்


எதை சம்பந்தப்படுத்தி வைக்க வேண்டுமோ அதை சம்பந்தப்படுத்தி வைக்காமல்

எதை சம்பந்தப்படுத்தி வைக்கக் கூடாதோ அதை சம்பந்தப்படுத்தி வைத்து விட்டனர்.


பணம் பதவி அதிகாரம் படைத்த ஆதிக்க சமுதாய மனப்பான்மை கொண்டவர்கள் 

வெள்ளை நிறம் அழகு, கறுப்பு நிறம் அழகு இல்லை என்ற 

விஷக் கருத்தை உருவாக்கி 

அந்த விஷத்தை மக்கள் மனதில் விதைத்து 

மக்களை கொடிய விஷயமாகவே மாற்றி விட்டனர். 


இதனால், வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்றும்

கறுப்பு நிறத்தில் இருப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும்

மக்கள் மத்தியில் பிரிவினை என்பது ஏற்பட்டு விட்டது


இதனால், வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் கறுப்பு நிறத்தில் இருப்பவர்களை

அடிமைகளாக நடத்தும் நிலையும் இந்த சமுதாயத்தில் உருவாகி விட்டது


இதனால், வெள்ளை நிறத்தில் இருப்பவர்களுக்கு 

தாங்கள் அழகாக இருக்கிறோம் என்ற ஆணவமும்,

கறுப்பு நிறத்தில் இருப்பவர்களுக்கு 

தாங்கள் அழகு இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் 

ஏற்பட்டு விட்டது.


சமாதானத்திற்கு வெள்ளை நிறத்தையும்

துக்க நிகழ்வுகளுக்கு கறுப்பு நிறத்தையும் பயன்படுத்துவதிலிருந்து

கறுப்பு நிறத்தை தாழ்வானதாகவும்,

வெள்ளை நிறத்தை உயர்வானதாகவும்,

இந்த சமுதாயம் அங்கீகரித்து வைத்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்


உடலில் உள்ள ஒரு சுரப்பியிலிருந்து சுரக்கும் ஒரு வகை திரவத்தைப் பொறுத்தே

மனிதர்களுக்கு வெள்ளை நிறமும், கறுப்பு நிறமும் ஏற்படுகிறது


இந்த சுரப்பி குறைவாக திரவத்தை சுரந்தால் வெள்ளை நிறத்தில் இருப்பார்கள்

இந்த சுரப்பி அதிகமாக திரவத்தை சுரந்தால் கறுப்பு நிறத்தில் இருப்பார்கள்


சுரப்பியிலிருந்து திரவம் அதிகமாக சுரப்பதால் கறுப்பு நிறத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்

சுரப்பியிலிருந்து திரவம் குறைவாக சுரப்பதால் வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க மாட்டார்கள்


அதனால் ஆரோக்கியத்தின் நிறம் கறுப்பு தான் என்பதை உறுதியாக சொல்லலாம் 


வெள்ளை நிறத்தில் உள்ள குதிரை, பூனை, சிறுத்தை, நாய் ஆகியவற்றை விட

கறுப்பு குதிரை, கறுப்பு பூனை, கருஞ்சிறுத்தை, கறுப்பு நாய் ஆகியவை 

வலிமையானதாகவும், அழகாகவும் இருக்கும் 


பல்வேறு நிலைகளில் இருந்து ஆராய்ந்து பார்த்தால்

வெள்ளை நிறம் தாழ்வானது கறுப்பு நிறம் உயர்வானது

ஆனால்,

தாழ்வான வெள்ளை நிறத்தை உயர்வான நிறமாக வைத்து விட்டனர்

உயர்வான கறுப்பு நிறத்தை தாழ்வான நிறமாக வைத்து விட்டனர்


வெள்ளை நிறம் உயர்ந்தது கறுப்பு நிறம் தாழ்ந்தது 

என்ற கருத்து சமுதாயத்தில் நிலவுவதால்

வெள்ளை நிறத்தில் உள்ளவர்கள் மனதில் 

அதிக அளவு தன்னம்பிக்கையும்,

கறுப்பு நிறத்தில் உள்ளவர்கள் மனதில்

தன்னம்பிக்கை இல்லாத ஒரு நிலையையும் ஏற்படுத்தி விட்டது.


வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணை ஒரு ஆண் காதலித்தால் 

நீ காதலிக்கும் பெண் அழகாக இருக்கிறாள் என்றும்,

கறுப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணை ஒரு ஆண் காதலித்தால்

இந்த பெண்ணையா காதலித்தாய்

காதலிக்க வேறு பெண்ணே கிடைக்கவில்லையா என்று

சொல்லும் நிலை தான் இந்த சமுதாயத்தில் உள்ளது


-----ஜபம் இன்னும் வரும்


----11-03-2025

////////////////////////////////

No comments:

Post a Comment