June 22, 2020

திருக்குறள்-நிறைநீர-பதிவு-1


            திருக்குறள்-நிறைநீர-பதிவு-1

“நிறைநீர நீரவர்
கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு”

------------திருக்குறள்
------------திருவள்ளுவர்

”நல்லவர் நட்பு
வளர்பிறை போல
நாளும் வளரும் ;
தீயவர் நட்பு
தேய்பிறை போல
நாளும் தேயும் ;
என்பதே இந்தத்
திருக்குறளுக்கு
பொதுவாக
சொல்லப்படும்
விளக்கம்”

“இந்தத் திருக்குறளுக்கு
கீழ்க்கண்டவாறும்
விளக்கம்
சொல்லலாம்”

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும்
மூன்று
செயல்களைச்
செய்து
கொண்டிருக்கின்றனர்.
மூன்று
செயல்களையும்
ஒருவரே
செய்வதில்லை”.

“இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
ஒரு செயலைச்
செய்வதில்லை “

“ஒரு செயலைச்
செய்பவர்
இரண்டு
செயல்களைச்
செய்வதில்லை”

“மனிதர்கள்
செய்யும்
இரண்டு
செயல்கள்

ஒன்று  :
“அறிவுரை சொல்வது”

இரண்டு :
“குறை சொல்வது”

மனிதர்கள்
செய்யாத
ஒரு செயல்

ஒன்று :
“உதவி செய்வது”

“அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
ஒரு செயலான
உதவியை செய்ய
மாட்டார்கள்”

“ஒரு செயலான
உதவியை
செய்பவர்கள்
அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்ய மாட்டார்கள்”

“நாம் பல
ஆண்டுகளாக
புதியதாக
ஒரு தொழிலைத்
தொடங்க
வேண்டும்
என்று சிந்தனை
செய்து
கொண்டிருக்கிறோம் ‘”

“புதிய தொழிலைத்
தொடங்குவதற்கு
தகுந்த
சூழ்நிலைக்காகவும்
சரியான
காலத்திற்காகவும்
காத்துக்
கொண்டிருக்கிறோம்”

“புதிய தொழிலைத்
தொடங்குவதற்கு
பணத்தின்
வரவிற்காகக் காத்துக்
கொண்டிருக்கிறோம்”

“இடம் நேரம்
காலம் சூழ்நிலை
ஆகியவை
அமைந்த போது
பல்வேறு
இடையூறுகளையும்
கஷ்டங்களையும்
துன்பங்களையும்
கடந்து நாம் பல
ஆண்டுகள் சிந்தனை
செய்து முடிவு செய்து
வைத்திருந்த
தொழிலைத்
தொடங்குகிறோம் “

“அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
புதியதாக
நாம் தொழிலைத்
தொடங்கும்
போது முதலில்
அறிவுரை
சொல்ல
வருவார்கள்”

“இது எல்லாம்
உனக்கு தேவையா?”

“தெரியாத
விஷயத்தை
ஏன் செய்கிறாய் “

“உனக்கு இது
ஒத்து வராது”

“யாரும் செய்ய
முடியுமா என்று
யோசிப்பதை நீ
ஏன் செய்கிறாய்”

“யாரும் செய்ய
முயற்சிக்காததை
நீ ஏன் செய்கிறாய்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------22-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment