June 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-30


             ஜபம்-பதிவு-522
        (அறிய வேண்டியவை-30)

(அபிமன்யுவின்
மனைவி உத்தரைக்கு
முனிவர் ஒருவர்
மாயக்கண்ணாடி
ஒன்றை பரிசாக
அளித்திருந்தார்  ;
அந்த மாயக்கண்ணாடி
முன்பு நின்று
கொண்டு
உத்தரை பார்த்துக்
கொண்டிருந்தாள்;
அப்போது
அபிமன்யு அங்கே
வருகிறான்)

அபிமன்யு :
“உத்தரை
என்ன செய்து
கொண்டிருக்கிறாய்?”

உத்தரை :
“எனக்கு முனிவர்
ஒருவர் கண்ணாடி
ஒன்றை பரிசாகக்
கொடுத்திருக்கிறார் ;
அதை பார்த்துக்
கொண்டிருக்கிறேன் ;”

அபிமன்யு :
“உருவத்தைக்
காட்டும்
கண்ணாடி தானே
நீ மட்டுமல்ல
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
தங்களை
அனுதினமும்
கண்ணாடியில்
பார்த்துக்
கொண்டு தானே
இருக்கிறார்கள் ”

“அதை ஏன்
ஆச்சரியம்
கலந்த
மகிழ்ச்சியுடன்
பார்த்துக்
கொண்டிருக்கிறாய்”

உத்தரை :
“இது சாதாரண
கண்ணாடி
இல்லை “

அபிமன்யு :
“பிறகு”

உத்தரை :
“இது
மாயக்கண்ணாடி”

அபிமன்யு :
“என்னது
மாயக்கண்ணாடியா?”

உத்தரை :
“ஆமாம்
மாயக்கண்ணாடியே
தான் “

அபிமன்யு :
“அப்படி என்ன
சிறப்பு இந்த
மாயக்கண்ணாடியில்
இருக்கிறது “

உத்தரை :
“எந்தக்
கண்ணாடியிலும்
இல்லாத சிறப்பு
இந்த மாயக்
கண்ணாடியில்
இருக்கிறது ;
இது உருவத்தைக்
காட்டும்
கண்ணாடி அல்ல
மனதில் உள்ளவரைக்
காட்டும் கண்ணாடி”

அபிமன்யு :
“இந்தக் கண்ணாடி
மனதில்
உள்ளவரைக்
காட்டுமா  ?
யாருடைய
மனதில்
உள்ளவரைக்
காட்டும் ? “

உத்தரை :
“கண்ணாடி
முன்னால்
நிற்பவருடைய
மனதில்
உள்ளவரைக்
காட்டும் “

அபிமன்யு :
“புரியவில்லை”

உத்தரை :
“இந்த மாயக்கண்ணாடி
தன் முன்னால்
நிற்பவருடைய
உருவத்தைக்
காட்டாது “

“யார் இந்தக்
கண்ணாடி
முன்னால்
நிற்கிறாரோ
அவருடைய
மனதில் யார்
இருக்கிறாரோ
அவருடைய
உருவத்தைத்
தான் காட்டும் “

அபிமன்யு :
“வித்தியாசமாகத்
தான் இருக்கிறது”

உத்தரை :
“ஆமாம் !
வித்தியாசமானது
தான் “

அபிமன்யு :
“மாயக்கண்ணாடி
முன்பு நின்று
நீ பார்த்தாயா?”

உத்தரை :
“பார்த்தேன்”

அபிமன்யு :
“யார்
தெரிந்தார்கள் “

உத்தரை :
“யார்
தெரிவார்கள் என்று
நினைக்கிறீர்கள் “

அபிமன்யு :
“தெரியவில்லை”

உத்தரை :
“ஆண்கள்
நடிப்பதில்
திறமைசாலிகள்
என்று கேள்விப்
பட்டிருக்கிறேன் ;
அதை உண்மை
என்று நிரூபித்துக்
கொண்டு
இருக்கிறீர்கள் ;”

அபிமன்யு :
“ஏன் அவ்வாறு
சொல்கிறாய்?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 22-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment