June 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-32


               ஜபம்-பதிவு-524
         (அறிய வேண்டியவை-32)

உத்தரை :
“நீங்கள்
விளையாடியது
போதும் ;
உங்கள் மயக்கும்
மொழிகளுக்கு
நான் ஏற்கனவே
மயங்கித் தான்
கிடக்கிறேன் ;
மேலும் என்னை
வார்த்தைகளால்
வசியப்படுத்தி
மயக்கிக்
கொண்டு
இருக்காதீர்கள் ;”

“வார்த்தை
விளையாட்டு
போதும்
மாயக் கண்ணாடி
முன்னால் வந்து
நில்லுங்கள் “

அபிமன்யு :
“ஏன் ?”

உத்தரை :
“உங்களுடைய
மனதில் யார்
இருக்கிறார்கள்
என்று
நான் தெரிந்து
கொள்ள
வேண்டாமா?”

அபிமன்யு:
“என்னுடைய
மனதில்
உன்னை
விட்டால்
வேறு யார்
இருப்பார்கள்?”

“என்னுடைய
மனதில் நீ
தான் இருக்கிறாய்
என்று உனக்கு
மட்டுமல்ல
இந்த உலகத்திற்கே
தெரியுமே “

“அதை நான்
மாயக்கண்ணாடி
முன்னால்
வந்து நின்று
தான் நிரூபிக்க
வேண்டுமா ?”

உத்தரை :
“உங்களை
எதையும்
நான் நிரூபிக்க
சொல்லவில்லை
மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
நில்லுங்கள்
என்று தான்                          
சொல்கிறேன் “

“உங்களுடைய
மனதில்
யார் இருக்கிறார்
என்பதை
தெரிந்து கொள்ள
ஆசைப்படுகிறேன்
அதனால் தான்
மாயக்கண்ணாடி
முன்னால்
வந்து நிற்கச்
சொல்கிறேன்”

அபிமன்யு :
“உன்னுடைய
விருப்பம்
அதுவானால்
அப்படியே
செய்கிறேன்”

(என்று சொல்லி
விட்டு அபிமன்யு
மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
நிற்கிறான்
கண்ணாடியில்
உத்தரை
தெரிகிறாள்)

அபிமன்யு :
“நான் சொல்வது
உண்மை என்று
இப்போதாவது
தெரிந்து
கொண்டாயா ?”

“பெண்கள்
எப்போதும்
கணவன் மேல்
சந்தேகம்
கொள்பவர்கள்
தான் “

“உண்மை
எது என்று
நிரூபிக்கும்
வரை விட
மாட்டார்கள்”

உத்தரை :
“ஆண்கள்
மட்டும் என்ன
நியாயமானவர்களா
உண்மையை
மறைப்பதில்
கைதேர்ந்தவர்கள்”

(பஞ்ச பாண்டவர்கள்
திரௌபதி
ஆகியோர்
வருகின்றனர்)

திரௌபதி :
“என்ன பிரச்சினை
உங்களுக்குள் ;
ஏன் இருவரும்
சண்டையிட்டுக்
கொண்டிருக்கிறீர்கள் “

உத்தரை :
“யார் மனதில்
யார் இருக்கிறார்கள்
என்ற பிரச்சினை தான்”

திரௌபதி :
“அதற்காக ஏன்
சண்டையிட்டுக்
கொண்டிருக்கிறீர்கள் “

“அபிமன்யுவின்
மனதில்
உத்தரையும்
உத்தரையின்
மனதில்
அபிமன்யுவும்
தானே
இருப்பீர்கள்”

உத்தரை :
“அதை சோதித்துப்                   
பார்க்கும் போது
தான் எங்களுக்குள்
சண்டை
ஏற்பட்டது”

திரௌபதி :
“சோதித்துப்
பார்த்தீர்களா
எப்படி ?”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 22-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment